அறிவுக்கு உணவு/உயர்வு பெறாது

விக்கிமூலம் இலிருந்து

உயர்வு பெறாது

வாள் முனையே வலிமையுடையது என்றான் நெப்போலியன். நா. முனையே வலிமையுடையது என்றான் நாவலன். பேனா முனையே வலிமையுடையது என்றார் வால்டேர். அறிவு முனையே வலிமையுடையது என்றார் ஷா. இவை அனைத்தையும் மறுத்து ஒழுக்க முனையே வலிமையுடையது என்றார் வள்ளுவர். ஒழுக்கமற்றவனுடைய வாளோ, நாவோ, பேனாவோ, அறிவோ வலிமை பெறாது; பெற்றாலும் வெற்றி பெறாது பெற்றாலும் நிலைத்து நில்லாது.