அறிவுக்கு உணவு/திருந்துங்கள்

விக்கிமூலம் இலிருந்து

திருந்துங்கள்

பஞ்சு மெத்தைகளில் நடைபெறும் கொடுமைகளைப் போலத் தாழம் பாய்களில் நடப்பதாக அறிய இயலவில்லை. சிறு குடிசைகளில் கேட்கப்படுகின்ற அன்புச்சொற்களைப் போலச் சிங்கார மாளிகைகளில் கேட்க இயலுவதில்லை.‘குணம் பெற்றால், பணம் விலகும்’ என்பதும், ‘பணம் பெற்றால், குணம் விலகும்’ என்பதும், பத்தில் ஒன்பது பங்கு உண்மை போலும்!