அந்தமான் கைதி/15

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 15.

இடம் : வீதி

பாத்திரங்கள் : ஜம்பு, சுப்பையா.

[ஜம்புவும், சுப்பையனும் வருகிறார்கள்]

ஜம்பு : டேய் சுப்பையா!

பையன் : வாங்க கணக்கப்பிள்ளை ஐயா, எஜமான் ஒங்களைக் கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க, ஒங்க வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டிருந்தேன்.

ஜம்பு : எதுக்குடா?

பையன் : எஜமான் தங்கச்சியில்லிங்க, அவங்க வந்திருக்காங்க.

ஜம்பு : அப்படியா! என்ன விஷயம்?

பையன் : எல்லாம் முடுஞ்சு போச்சு. எஜமானுக்கு நாள் பார்க்க வேண்டியது ஒன்னுதான் பாக்கி.

ஜம்பு : எஜமானுக்கு நாள் பாக்கனுமா?

பையன் : ஆமாங்க, எல்லா ஏற்பாடும் முடுஞ்சு போச்சு. ஐயரையுங் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி விட்டாங்க. கழுத்திலே கயத்தைப் போடுறதுக்கு நாள் பாத்துட்டா கல்யாணம் முடிஞ்சமாதிரி தான். உம், புறப்படுங்க.

ஜம்பு : சரி. நான் முன்னாடிப் போறேன்; நீ போயி நம்ம பாலகிருஷ்ண சாஸ்திரியேக் கையோட இழுத்துக் கிட்டுவா.

பையன்: இதோ!-

(போகிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/15&oldid=1073502" இலிருந்து மீள்விக்கப்பட்டது