தமிழ்ப் பழமொழிகள்
121
ஆனை இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டாம்.
ஆனை இருந்த இடமும் அரசன் இருந்த இடமும் ஒரு நாளும் பொய்யாகா.
ஆனை இருந்தால் சேனைக்குப் பலம்.
ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது. 2785
ஆனை இல்லாத ஊர்வலம் பருப்பு இல்லாத கல்யாணம்.
ஆனை இல்லாத ஊர்வலம் மாதிரி.
ஆனை இளைத்தால் ஆடு ஆகுமா?
ஆனை இளைத்தால் எவ்வளவு இளைக்கும்?
ஆனை உண்ட விளாங்கனி போல. 2790
ஆனை உயரம் பூனை ஆகுமா?
ஆனை உறங்குவதும் ஆட்டுக்கிடா பிந்துவதும்.
ஆனை ஊர்வலத்தில் அடைபட்டதாம் காவேரி.
ஆனை ஊற்றுக்குக் கொசு எம்மட்டோ?
ஆனை எதிர்த்து வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே. 2795
- (வைணவர் சொல்வது.)
ஆனை எவ்வளவு பெரிதானாலும் அங்குசக் குச்சிக்கு அடக்கந்தானே?
ஆனை ஏற அங்குசம் இல்லாமல் முடியுமா?
ஆனை ஏற ஆசை; தாண்டி ஏறச் சீவன் இல்லை.
ஆனை ஏறிச் சந்தின் வழியாக நுழைவானேன்?
- (ஏறியும்.)
ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவதுபோல. 2800
- (ஏறியும்.)
ஆனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தாற்போல.
ஆனை ஏறினால் மாவுத்தன்; குதிரை ஏறினால் ராவுத்தன்.
ஆனை ஏறினால் வானம் எட்டுமோ?
ஆனை ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத்தான் வேண்டும்.
ஆனை ஏறும் பெரும்பறையன் ஆரூரில் இருப்பான். 2805
ஆனை ஒட்டினாலும் மாமி ஒட்டான்.
ஆனை ஒரு குட்டி போட்டும் பலன்; பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை.