தமிழ்ப் பழமொழிகள்
105
நகைத்து இகழ்வோனை நாய் என நினை.
நகை போட்டதும் இல்லை; போட்டவர்களைப் பார்த்ததும் இல்லை. 13495
நங்கும் நாளமும்.
நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல.
நச்சுப் பேச்சு நாளும் தரித்திரம்.
நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?
நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். 13500
நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் மரம்.
- (வச்சவன்.)
நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் குடியிருந்தாற்போல.
நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் பெண் கொடுத்தது போல.
- (பெண் கொண்டது போல.)
நசை கொன்றான் செல் உலகம் இல்.
- (பழமொழி நானூறு.)
நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி, குப்பையில் இருந்தாலும் கோமேதகம். 13505
நஞ்சு நாற்கலம் வேண்டுமா?
நட்ட அன்றும் சாவி; அறுத்த அன்றும் பட்டினி.
நட்ட அன்று மழையும், கெட்ட அன்று விருந்தும் கேடு.
- (இழவும் கேடு.)
நட்ட குழி நாற்பது நாள் காக்கும்.
நட்டது எல்லாம் மரம் ஆமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆமா? 13510
நட்ட நடுவில் முழம் ஆனேன்; நடவு திரும்பிச் சாண் ஆனேன்; தட்டான் இட்ட வேளாண்மை தானாய்ப் பொன்னிறம் ஆச்சுது.
நட்டாலும் தில்லை நாயகம் நடவேண்டும்.
நட்டாற்றில் கைவிட்டாற் போல.
நட்டாற்றுக் கோரையைப் போல.
நட்டு அறான் ஆதலே நன்று. 13515
நட்டு ஆயினும், பட்டு ஆயினும்.
- (பனை.)
நட்டுக் காய்ந்தால் நாழி நெல் காணாது.
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா?
- (நொட்டி)