தமிழ்ப் பழமொழிகள் 4/ஜ

விக்கிமூலம் இலிருந்து



ஜ


ஜகத்தைக் கொடுத்தும் சுகத்தை வாங்கு. 21325


ஜபம் சாயாது.

ஜம்பம் சாயாது.

ஜயம் உள்ள மட்டும் பயம் இல்லை.

ஜலப் பிராயம்.

ஜலம் அருணாசலந்தான். 21330


ஜலம் கண்ட இடத்தில் கங்கை.

ஜலம் நுழையாத இடத்தில் எண்ணெயும் எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.

ஜலம் விருத்தாசலம்.

ஜலமண்டலி கடித்தால் பரமண்டலந்தான்.

ஜன்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல. 21335


ஜன்மக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.

ஜன்ம குரு ராமர் வனவாசத்திலே.

ஜன்மத்தால் ஜாதியோ, கன்மத்தால் ஜாதியோ?

ஜன்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது.

ஜன்மம் முந்தியா, கன்மம் முந்தியா? 21340


ஜளத்தோடு ஜனம் சேரும்; சந்தனத்தோடு கற்பூரம் சேரும்.

ஜனபலம் இருந்தால் மனபலம் இரும்.

ஜா


ஜாடிக்கு ஏற்ற மூடி.

ஜாதி ஜாதியைக் கொள்ளும்; சதகுப்பை நாற்றத்தைக் கொடுக்கும்.


ஜூ


வித்தை காட்டுகிறேன்; பராக்கு இல்லம்மல் பார். 21345


ஜே


ஜேஷ்டப் பிராதா பிதுர் சம:


ஜை


ஜைனன் கைச் சீலைப் பேன் போல.

ஜோ


ஜோஸியம் சொல்லப் பாலியம் போதும்.

ஜோட்டால் அடித்து வெகுமானம் கொடுப்பது.

ஜோடி பிரிந்த அன்றில் போல. 21350


ஸ்


ஸ்திரி புத்தி பிரளயாந்த.

ஸ்மசான வைராக்கியம்.

ஸ்வான வைராக்கியம்.



லவஸ்ய காத்ஸ்ய சிரப்ரதானம்.

ஸர்வேந்த்ரியாணாம் நயனம் பிரதானம். 21355

பிற்சேர்க்கை


அக்கடா என்று இருக்கிறான்.

அக்கடா என்று கிடப்பேன்.

அக்குசு இருந்தால் செய்வான்

அக்குணிச் சிறுக்சிக்கு முக்கலக் கந்தை.

(கோழி)

அகடித கடனா சாமர்த்தியம். 5


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

அச்செல்லாம் ஒன்றாய் அதிலே இரண்டு வகை வைச்சதென்ன சோனகிரி வள்ளலே.

அசகாய சூரன்.

அசலுக்கே மோசம் என்றால் வட்டி எது?

அஞ்சில் அம்பதில் ஒன்றறியாதவன். 10

(கம்பராமாயணம்)


அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்.

அடாவடிக்காரன்.

அடித்து அடித்து அக்காரம் ஊட்டினது போல்.

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு

அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும். 15

(அண்ணன்-மேலுதடு. தம்பி-கீழுதடு. கீழுதடுதான் மேலுதட்டைத் அண்ணன் என்று சொன்னால் உதடுகள் சேரா. தம்பி என்றால் சேரும்)


அண்ணாமலைத் தீபம்.

அண்ணாமலையில் மொட்டைப் பரதேசியைக் கண்டாயா என்றாம் போல்.

அணிலும் மணலிற் புரண்டு ஒட்டிய மணலை அணையிற் போட்டது போல.

அனோரணீயாம் மஹதோர் மஹீயாம்.

அத்தை மடி மெத்தை. 20

அத்தோடு ஒன்று; பத்தோடு பதினொன்று.

அதிர அடிக்கிறான்.

அந்தச் சரக்கு இங்கே விலை போகாது.

அநாசாரம் அந்தணனுக்கு ஆகாது.

அநுமான் வால் போல் நீளுகிறது. 25


அப்பனுக்கும் பெப்பே உனக்கும் பெப்பே.

அப்பனைப்போல் பிள்ளை. அபத்தமாகப் பேசாதே.

அம்பட்டன் பொழுது போகாமல் தன் மனைவியின் தலையைச் சிரைத்தானாம்.

அம்மானை ஆடுகிறான்.

அமர்க்களத்தில் ஒப்பாரி உண்டா? 30


அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இடுகிறது.

அயல் வீட்டுப் பிராம்மணா. பாம்பைப் பிடி, அல்லித்தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்.

அர்ஜுனன் மனைவிமாரையும் ஆகாசத்து நட்சத்திரங்களையும் எண்ண முடியாது.

அரங்கின்றி வட்டாடி அற்றே. 35


அரசன் மெச்சினவள் ஊர்வசி.

அரண்மனைச் சேவகத்துக்குப் பஞ்சம் இல்லை.

அரவம் ஆட்டேல்.

அருட்செல்வம் செல்வத்தும் செல்வம்.

அருள் அற்றார் எல்லாம் அற்றார். 40


அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் வராது.

அரை குலையத் தலை குலைய.

அரைத்த மஞ்சன தாவ தறிந்தேன்.

அரைத்த மர்வையே அரைத்தல்.

(பிஷ்டபேஷண்ய நியாயம்.)

அல்லும் பகலும் அனவரதமும். 45


அலை அடங்கின கடலைப் போல்.

அவ்வினைக்கு இவ்வினை ஆகும்.

அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்.

(தாயுமானவர்.)

ஆக்கத் நெரியும்; படைக்கத் தெரியாது.

ஆகூழ் இருபபதெல்லாம் ஆகும். 50

ஆங்காரம் அடிங்கினால் பரமானந்த பதவி கிடைக்கும்.

ஆங்காரமதை அடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத் தூங்காமல் தூங்கும் சுகம்.

ஆசா பாசம் அந்தம் வரையில் விடாது.

ஆசானே தெய்வம்.

ஆசி கூற ஆன்றோர் வேண்டும். 55


ஆசை அதிகமானால் மோசம் போவான்.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு.

ஆடிப் பாடி அமர்ந்தான்காண் அம்மானை.

ஆடு குழை தின்றது போல.

ஆண்டவன்மேல் பாரத்தைப் போடு. 60


ஆணவம், சன்மம், மாயை என்பவை மூன்று மலங்கள்.

ஆத்தாடி, இந்தக்கொண்டை ஆரைக் குடி கெடுக்க?

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி.

(திருவாசகம்.)

ஆமை நினைத்துக் குஞ்சு பொரிக்கும்.

ஆமை வேகத்தில் நடக்கிறான். 65


ஆயிரம் நாப் படைத்த ஆதிசேஷனாலும் சொல்ல முடியாது.

ஆரே அழகுக்கு அழகு செய்வார்?

ஆளுக்கு ஏற்ற மதிப்பு.

ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்.

ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடிய ஆதர் போல். 70


ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதி கெடும்.

ஆனை அடி அப்பளம்.

ஆனை ஆனை அழகர் ஆனை.

ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான மதுரை நகர்.

இங்குஸ்தி அங்குஸ்தி. 75


இச்சா பத்தியம்

இசகு பிசசாக இருக்கிறது.

இடி இடிக்க, மழை பெய்ய.

இம்மியளவும் கொடான்.

இமயம் போல் உயர்ந்து நிற்கிறான். 80


இயற்கைக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.

இரட்டை மண்டையன்.

இரத்தல் இழிவு தரும்.

இரவல் புடைவையில் தூரமானாற்போல.

இரவி அறியாததைக் கவி அறியான். 85


இரவியின் முன் மின்மினி போல.

இரவில் கேட்ட இராமாயணம் ஓர் ஆள் பாரம்.

இரவு முழுவதும் இராமாயணம் கேட்டுச் சீதைக்கு இராமன் சிற்றப்பன் என்றானாம்.

இருட்டறையில் மலடு கறந் தெய்த்த வாறே.{{float_right|90}


இல்லாதவன் சொல் செல்லாது.

இல்லாதவனை இல்லாளும் நாடாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.

இளைத்தவனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு.

இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பரென்று எண்ணவோ திடம் இல்லை. 95

(தாயுமானவர்.)


ஈரோடு பேன் வாங்கி.

உண்மையே வெல்லும்.

உப்புக்கும் புளிக்கும் பாடுவாள் ஒளவை.

உருகுவது பக்திக்கு அடையாளம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். 100


உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளம்.

எல்லை மீறிப் பேசுகிறான்; ஒட்டி ஒட்டி உறவாடுகிறான்.

ஓடு புனற் கரையம் இளமை, உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி.

கண்டு ஒன்று சொல்லேல். 105


கண்ணே கண்ணு, ஒண்ணே ஒண்ணு.

கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே.

கலலார் நெஞ்சில் நில்லான் ஈசன்

கழுதை குங்குமம் தான்சுமந் தெய்த்தால் கைப்பர் பாழ்புக.

கற்றது ஒழுகு. 110


கற்றபடி நில்.

கற்றவர் காய்வது காமனையே.

கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி போல்.

கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வன்.

காக்கை விழுந்து விழுந்து கரையும். 115


காணக் கண் கோடி வேண்டும்.

காயைத் தின்றால் பழம் இல்லை.

கார்த்திகைத் தீபம் பார்த்த பிறகே சாப்பிடவேண்டும்.

காரியம் ஆனாலும் வீரியம் பேசேல்.

காலை எழுந்தவுடன் படிப்பு. 120

(பாரதியார்.)


கிளியை வளர்த்துப் பூனை தின்னக் கொடுத்தது போல.

குக்கல் வாலைக் கோலைக் கொண்டு நிமிர்த்த முடியுமா?

குக்கல் விக்கிச் செத்தது.

குரங்குப் புண்ணாகப் பண்ணுகிறான்.

குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு. 125


கூட்டத்தில் போன பாம்பு சாகாது.

கூவல் ஆமை குரை கடல் ஆமையைக் கூவலோடு ஒக்குமோ கடல் என்றது போல.

கூழுக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் என்றன் உளம்

(ஒளவையார் வாக்கு.)

கொடுத்து வைத்தது வரும்; பேராசைப் படாதே.

கொண்டை பூவுக்கு அழுகிறது; கும்பி கூழுக்கு அழுகிறது. 130


கொத்தைக்கு ஓங்கில் வழிகாட்டியது போல.

சந்திராதித்தர் உள்ள வரைக்கும்.

சமுத்திரம் கொதித்தால் விளாவ நீர் எங்கே?

சீந்திற் சர்க்கரையையும் சுக்குத் துண்டையும் தேனோடு கலந்து மோந்து பார்த்தால் தலைவலி போய்விடும்.

சீனிச் சர்க்கரை சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா. 135


சுக்லாம் பரதரரம் குட்டி ஆயிற்று.

கம்மா இரு, சொல் அற.

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

செக்கு மட்டை வண்டியில் கட்டி ஒட்டினால் அது சுற்றிச் சுற்றி வரும்.

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நோகலாமா? 140


சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிறவன் பெரியவன்.

தந்தையார் போயினார், தாயாரும் போயினார். தாமும் போவார்.

தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கிறான்.

தன் உயில் வெல்லம்.

தாய் ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும். 145


தாய் மனம் பித்து, பிள்ளை மனம் கல்.

தாவிப் படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடி போல் தவிக்கிறான்.

திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி அலுத்தேன்.

தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீது.

தீயார் சொல் கேட்பதுவும் தீது. 150


தீயாரைக் காண்பதுவும் தீது.

தீயாரோடு இணங்கி இருப்பதுவும் தீது.

துன்பம் உண்டேல் இன்பம் உண்டு.

தைப்பூசம் பறைப் பூசம்.

தோளாத சுரையோ தொமும்பர் செவி? 155


தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.

நடு ஊரிலே பழுத்த மரம் போல.

நஙதா விளக்கனைய நாயகன்.

நம்புவதே வழி.

நமது குடுமி அவன் கையில் சிக்கியது. 160


நரி வரால் கவ்வச் சென்று நற்றசை இழந்தது போல,

நல்லார் குணங்கள் டிரைப்பதுவும் நன்று.

நல்லார் சொற் கேட்பதுவும் நன்று.

நல்லாரைக் காண்பதுவும் நன்று.

நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. 165


நாய் ஏறி விழகிலென்? நடாத்திலென்?

நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; கழுகுககு மூக்கில் வேர்க்கும்.

நாயாய்ப பிறக்கினும நல வேடடை ஆடி நலம் புரியும்.

நாள் செய்வது நல்லோர் செய்யார்.

நிலவரை நீலம உண்டதும் வெள்ளை நிறமாகும். 170


நிரைச் சுருக்கி நெய்யை உருக்கி மோரைப் பெருக்கி உண்.

நெற்றியில் ஒற்றைக் கண் படைத்தவன்.

பகற்கனவு காண்கிறான்.

பலவின் கனி ஈ துன்னுமதுபோல்.

பழிக்குப் பழி கொடடா. 175

பழைய மரமசிவம்.

பிழுக்கை வாரியும் பால் கொள்வர்.

பிறவியால் வருவன கேடு உள.

புதையல் எடுத்த தனம்போல.

புல்நுனைப் பணி வெங்கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை. 180


பூமிதேவி சாட்சி.

பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே.

பேயோடேனும் பிரிவு இன்னாது.

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறை குளம்?

பொற்குன்றம் சேர்ந்த தொல்காக்கையும் பொன்ரைம். 185


மணக் கோலமதே பிணர்கோலமதாம் பிறவி.

மனம் என மகிழ்வர் முன்னே; பிணப் எனச் சுடுவர் பேர்த்தே.

மத்தார் தயிர் போல் மறுகும் சிந்தை.

மத்துறு தயிரே போல மறுகும் உள்ளம்.

மதியால் விதியை வெல்ல முடியுமா? 190


மன்றத்துப் புன்னை போல மரடு படு துயரம்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்.

மார்கழி மாதம் திருவாதிரை வரும்.

மாலை முழுதும் விளையாட்டு. 195

(பாரதியார்.)


மானம் அழிந்து மதி கெட்டுப் போனவளே.

முகத்தைச் சுற்றி மூக்கைலப் பிடிக்கிறான்.

முகம் பாகம் பண்டமும் பாகம்.

முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி.

முயல் விட்டுக் காக்கைப் பின் போனவாறே. 200


மோத்தையைக் கண்ட காக்கை போலப் பலவினை மொய்க்கும்.

யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்?

வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே.

வாயால் கெட்டது தவளை.

வாழ்வது மாயம்; இது மண்ணாவது திண்ணம். 205


விளக்கிருங்க்க மின்மினித்திக் காய்ந்தவறே.

வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்ட அப்புல் பனி கெடுமாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_4/ஜ&oldid=1161654" இலிருந்து மீள்விக்கப்பட்டது