168
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அந்த அன்புகூடக் காலப்போக்கிலே, நமது நாட்டிலே, நவீன உலகத்தின் காரணமாகப் பூரணமாகச் செழித்து வளருமோ வளராதோ என்ற ஐயப்பாடு தோன்றியிருக்கிறது.
‘பால் நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து’
என்றார் மாணிக்கவாசகர். அவருக்கு அதிலே நிறைய இன்பம். அந்த வார்த்தைகளைச் சொல்லுகின்றபோதே அவருடைய நாவினிக்கின்றது.
‘நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து.’
என்ற வாக்கியத்திற்கு நீண்ட நாட்களாக எனக்கு உரை விளக்கம் கிடைக்கவில்லை.
நினைந்து ஊட்டுகிற தாய் என்பதைக் கேட்டிருக்கிறோம்.
நினைந்து ஊட்டுகின்ற தாய் மிகவும் பெருமை மிக்கவள் அல்லவா? நினைந்து ஊட்டுவதைவிடச் சிறப்பு என்ன இருக்கிறது?
சாதாரணமாக அழுதும் ஊட்டாத தாயை உலகத்தில் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்!
அழுத பிறகு ஊட்டுகின்ற தாயையும் பார்க்கின்றோம்.
சில பேர் காலம் அறிந்து நினைந்து ஊட்டுவார்கள்.
மாணிக்கவாசகர் இந்த மூன்று தாயையும் பற்றிச் சொல்லுகிறார்.
‘நினைந்து ஊட்டுகிற தாயைவிடச் சிறந்தவன்’
என்பதற்குத் திருவள்ளுவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.