இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
312
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
‘யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எவ்வழி கொல்லோ
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே’
என்ற அகத்திணைப் பாடல் இதற்குச் சான்று.
ஆதிசைவ மரபில் தோன்றிய நம்பியாரூரர், சிவ பெருமான் துணையுடன் குலமரபுத் திருமணம் தவிர்க்கப்பட்டுக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
ஆதலால் சாதி முறைகள், குலம், கோத்திர முறைகள் தவிர்க்க இயலாதவை அல்ல. மனித நேயமே முக்கியம். ‘மனிதம்’ போற்றலே இன்று தேவை, சாதிகள் பார்க்காமல், மதங்களைப் பார்க்காமல் எல்லாரும் இந்தியராக வேண்டும்.
எல்லாரும் இந்தியராதற்குத் தடையாகவுள்ள எதையும் இந்தியராகிய தாம் சிந்தனை செய்யலாகாது; நடை முறைப்படுத்தவும் கூடாது. இதுவே சமூக நீதி, அரச நீதி.