குறள் நூறு
367
பெரியவர்களைப் போற்றித் தமக்குச் சுற்றத்தார்களாகக் கருதித் தழுவிக் கொள்ளுதல், அரசன் பெறுதற்கரிய பேறுகள் அனைத்திலும் அருமையாகும்.
பெரியார் சுற்றத்தாராதல் மூலம், அருமையானவற்றை யெல்லாம் அடையலாம்.
51. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
சார்ந்தொழுகும் இனத்தூய்மையின் வழி, மனத்தூய்மையும் செய்யும் செயலின் தூய்மையும் வந்தமையும்.
பொருள்
மனத்தூய்மைக்குரிய சிந்தனையும் பழக்கங்கட்குரிய செயல் தூய்மையும் சேர்ந்தொழுகும் நட்பின் வாயிலாக அமைவதால் இனத்தூய்மையைக் காத்தல் வேண்டும்.
52. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
செய்யத்தகாத செயல்களைச் செய்தாலும் கேடுவரும்; செய்யவேடியவற்றைச் செய்யாமையாலும் கேடு வரும்.
பொருள்
செய்யத்தக்கனவற்றைச் செய்து தகாதனவற்றை விலக்க வேண்டும்.
53. ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
கொடுக்கும்பொழுது பொருளின் அளவறிந்து கொடுத்தல், பொருளைப் போற்றி வாழும் நெறியாகும்.