368
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பொருள்:
மாற்றார்வலி தம்வலியினும் மிகாதவாறு காத்துக் கொள்ளத் தக்கவகையில் ஆட்சியாளரின் கொடை அமைய வேண்டும்.
54. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
உலகத்தைத் தன்பாற் கொள்ளக் கருதுகின்றவர்கள், அதை அடைவதற்குரிய துன்பங்களைப் பற்றி எண்ணிக் கலங்காமல் உலகத்தைக் கொள்ளுதற்கரிய காலம் கனிகின்ற வரை காத்திருப்பர்.
பொருள்
எந்த ஒன்றை அடைவதற்கும் உரிய காலம்வரும் வரை காத்திருக்க வேண்டும்.
55. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
தொடங்கும் செயலை முழுதாக முடித்தற்கு உரிய காலத்தின் இயல்பறிந்து தொடங்குக; இடையில் எச்செயலையும் எளிதென்று எண்ணற்க.
பொருள்
எச்செயலையும் முடித்தற்குரிய வழிகளை அறிந்து தொடங்க வேண்டும்.
56. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
ஒருவரின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து மிகுதியானவை பற்றி அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.