இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
320
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வதந்திகளை ஆழக்குழி தோண்டிப் புதை!
வதந்திகளை நம்பாதே!
வதந்திகள் உண்மையானால்
நாமனைவருமே சுட்டுக் கொல்லப்பட வேண்டிய
குற்றவாளிகள்!
ஆனால், நாம் வாழ்கின்றோம்!
மேலும் வளமாக வாழ ஆசையும் உண்டு!
மக்களின் குற்றங் குறைகள் பற்றி
வதந்திகள் உண்டு!
தங்கமூலாம் பூசிய தார்க்குப்பாய் போல
நன்மையைப் போலப் பரவும் வதந்திகள் பலப்பல!
ஆனால், உண்மையில் எந்தப் பாபமும் இருப்பதில்லை.
நாம் முட்டாளாக விரும்பினால்
வதந்தியை நம்பலாம்!
ஆனால் ஒன்று உண்மை!
புதைகுழிகள் வதந்திகளைப் பரப்புவதில்லை!
வதந்திகளைப் புதைகுழியில் இட்டு
மூடிவிட்டால் என்ன?