இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்து மொழிகள்
405
என்னே, மனித வாழ்வின் குறிக்கோள்! உணர்ந்து ஆன்ம சுத்தியுடன் அருளியல் வாழ்வு வாழ்ந்து பயனடைய முன் வரவேண்டும். இந்தப் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க, கருணைக் கடலான, இறைவனின் ‘தாள்’ என்னும் தெப்பத்தில் ஏறிக்கொள்ள வேண்டும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்கிறார் வள்ளுவர்.
உருவங்களைக் கடவுளாகவே கருதி வழிபடவேண்டும். இறைவனிடம் உள்ளம் ஒன்றி நிற்க, கடவுளைக் காட்டும் உருவம் உண்மையான கடவுளாகக் காணப்படும். கடவுட் கொள்கை உயிர்ப் பலியை வெறுக்கிறது. எல்லா உயிர்களுக்கும் தந்தையான மங்கைபங்கன் சில உயிர்களை வதைத்துப் பலியிடுதலைப் பொறுக்கமாட்டான். பலியிடும் பழக்கம் ஒழிந்து மறையச் சைவ உலகம் தீவிரமாக முனைதல் வேண்டும்.