இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
252
மக்சீம் கார்க்கி
அந்தப் புதிய எண்ணம், அவள் இதயம் பெற்றெடுத்ததாகத் தோன்றிய அந்தப் புதிய எண்ணம் மீண்டும் நினைவு வந்தது. எனவே அவள் சொன்னாள்.
“கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாக்குவதற்காக, ஜனங்கள் தங்கள் உயிர்களை இழக்காதிருந்தால், கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”
ஜனக்கூட்டம் வாய் பேசாது அவளையே பார்த்தது.
அவள் மீண்டும் ஜனக்கூட்டத்துக்குத் தலை வணங்கிவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். சிஸோவ் தானும் தலை வணங்கியவாறு அவளைப் பின் தொடர்ந்தான்.
சிறிது நேரம் அந்த ஜனங்கள் அங்கேயே நின்றவாறு ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
பிறகு அவர்களும் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தார்கள்.