இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 105
73
தொண்டு செய்ய வருபவர்க்கு
இயற்கை வைக்கும் தேர்வு!
அலுவலகப் பணிகளுக்கே
ஆட்களைநாம் தேர்வதுபோல்,
இலகுகின்ற இயற்கையுமே
இவ்வுலக மக்களுக்கே,
உழைத்திடமுன் வருபவர்க்கே
உற்றதுயர், இடர்களெலாம்
இழைத்து, அவர் தொண்டுகளின்
ஏற்றங்கள் தேர்கிறது!
துன்பத்தில் துவளாமல்,
தொல்லைகளில் சளைக்காமல்,
இன்பத்தில் மயங்காமல்,
எவருளரோ, அவர்திறனை,
மக்களுக்குக் காட்டி,அவர்
மதிநலமும் தொண்டுளமும்
தக்கவையே எனத்தேர்ந்து,
தகுதிவரை செய்கிறது!
ஒக்கபடி உழைப்பவரை
உலகமக்கள் தாமறிந்து,
மிக்கநலம் போற்றுதற்கும்
மேன்மைநிலை இதுவன்றோ!
-1985