பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சை.சபை அக்கிராசனர் வாழ்த்து கோவண்ணர் என்றுமவர் கூறநிற்பர் இவ்வுலகில் கோவண்ணர் என்றிவரும் கூறநிற்பர்-மேவொண்ணா மன்றாடி யாரவரும் மக்களெலாம் மேவுமொரு மன்றாடி யாரிவரும் மற்று. யஅ அவ்வையர் நம்தாயோ டங்குவந்தார் முன்னிந்நாள் இவ்வையர் நம்தாயோ டிங்குவந்தார் - அவ்வையர் தம்தொழிலை நம் தாய்க்கும் தந்திடுவர் நிற்பரிவர் தம்தொழிலை நம் தாய்க்கும் தந்து. W For இவ்விதமா நம் இறைவர்க் கெவ்விதத்தும் ஒப்பாகும் செவ்வியரா இங்கு நிற்கும் செம்மலினி - திவ்வவையை ஆட்சிசெய வந்தது நம் ஆதியறப் பேறுசைவ மாட்சிசில சொல்வேன் மதித்து. உய சைவசம யக்கடவுள் சச்சிதா னந்தசிவம் வையகமெல் லாமதனன் மாணுருக்கள் - மெய்முதல அச்சிவத்திற் கன்பரிட்ட அந்தமிலா நாமங்கள் இச்சிவத்தை அன்றியொன்றிங் கில். உசு ஆன்மா எனப்படுவ தச்சிவதின் ஓரளவு மான்மா எனத்திரிந்து வாழுமனம் - ஆன்மாவின் யானென்னும் ஓர்நினைப்பாம் அஃதென தாய் ஐம்பொறி தேனென்னக் கொண்ட தெல்லாம் சேர்த்து[யாய்த் உஉ தேனென்னக்கொண்ட எல்லாம் தீப்போல்சுடுவதுகண் டூனென்னு நல்லுடல்விட் டோடியுயர் - கோனென்ன நிற்கின்ற நம்சிவத்தில் நிச்சலுமே சேர்ந்துவக்கக் கற்கின்ற தெத்தனையோ கண்டு. உங எ எத்தனை நூல் கற்றிடினும் எத்தனை நூல் செய்திடினும் எத்தனைதான் ஞானம் இயம்பிடினும் - அத்தனையும் 91