உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தேவலீலைகள்

"எந்தத் துரோகியாக இருப்பினும் எமக்கென்ன? இவன் சிவானுக்கிரகம் பெற்றுவிட்டான், சிவலோகம் அழைத்துச் செல்லப்போகிறோம்”

இதுபோல உரையாடல் நடந்தது. யமபடர்கள் "இவன் எப்படிச் சிவனருள் பெற்றான்?" என்று கேட்கச் சிவகண நாதர்கள் செப்புகின்றனர். (சிரிப்பை அடக்குங்கள்!) "இந்தக் குணநிதி கொலைசெய்தவன். குருவைக் கொன்றவன், அவர்தம் பத்தினியைப் புணர்ந்தவன் பாவம் இவை. ஆனால் இந்த வனத்திலே உருத்திராட்ச மரத்தின் காற்றுப்போக்கில் இருந்ததால் இவன் சிவனருள் பெற்றான்" என்று கூறிவிட்டுக் குணநிதியைச் சிவலோகம். அழைத்துச் சென்றனர் என்று சிவலோகமகிமையைக் கூறுகிறார் ஒரு புராணிகர். சுகுமாரன் சிவபூசையைக் கண்டான், சிவபதம் பெற்றான் குணநிதியின் உடலிலே உருத்திராட்சத்தின் மேல் உராய்ந்து வந்த காற்றுப்பட்டது. இதற்காக இக்கொடியவனுக்குச் சிவலோகம். அறிவா? அழகா? நீதியா? அன்றி ஆரியனுக்கு உயர்வு ஆணவக்கருத்தா? ஆற அமர யோசியுங்கள்.

இப்படிப்பட்ட மாபாவிகள் உலவும் இடம் சிவலோகமானால். சீலர்களுக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? சிவலோகத்தில் சுகுமாரனும், குணநிதியும் போன்ற மாபாவிகள் மகேஸ்வரன் அனுமதித்ததால் சென்று தங்கியுள்ளனர் என்று புராணம் கூறும் போது, "சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்!" என்று பஜனை பாடுவது தகுமா சிவபதம் தேவை என்று சித்தம் உருக ஜெபிப்பதில் அர்த்த-