________________
வர்ணிப்புப் பாடல்கள் 173 கேட்சு மிகவிரும்பிக் கெம்பீரமாய் மகிழ்ந்து நாட்கமல மாமுகந்தான் நற்சுகனைப் பார்த்துரைப் பான் (பாகவத அம்மானை) "அரவு யர்த்தவ னாடலம் படைக்கட லைவர் ஒருகு எப்படி யாம்படி கடப்பவோர் புணையாய்க் கருவின் மற்றெனைக் காத்தசெந் தாமரைக் கண்ணன் பொருவின் மாக்கதை விரித்தனை புகலெனப் புகன்றான்' '10 (பாகவதம்) "திரியோதன ராஜன் சேனைப் பெருங்கடலை அருகோர் குளம்படிபோ லைவர்கடக் கும்படிக்கு தெப்ப மதுவாகிச் சிறியேன் பொருட்டாக கெற்பமதில் வந்து கிருபைசெய்து தற்காத்த எங்கோன் திருவிளையாட் டெல்லாஞ் சொல்வா யெனவே"1 (பாகவத அம்மானை) கடைசிப்பாடல் வரையில் இவ்வாறே பாகவதத்தின் ஒவ்வொரு பாடலையும் எளிய கவிதை யாக்கிச் செல்லும் இம்முறையினைக் சங்கரமூர்த்திக்கோனார் கையாளுகிறார். முடி:ை "கனைத்துவண் டிமிர்துழாய்க் கண்ணன் மாக்கதை மனத்துற வழங்குநர் மகிழ்ந்து கேட்குநர் வினைத்திருக் கற்றுறு மெய்ம்மை யாதியா நினைத்தன பெற்றிவண்நீடு வாழியே12 (பாகவதம்) புனத்துளவ மாலைப் புருடோத்தமன் கதையை மனத்தில் மகிழ்ச்சிபெற வாகாய்ப் படிப்பவரும் இனித்தமு துண்பவர்போ லின்புற்றே கேட்பவரும் நினைத்தவரம் பெற்றுலகில் நீடூழி வாழியவே'13 (பாகவத அம்மானை)