பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


மனித குலத்தின் இந்த நம்பிக்கைக்கு, உலக நீதியின் அரணுக்கு உயிர் நாடியாக இருக்க முடியும். இந்நாட்டிலுள்ள நாம் ஐ. நா. வைப் பலப்படுத்த உத்தேசித்திருக்கிறோம். எனவேதான் இந்தக் கொண்டாட்டம். எனவே தான் இந்த வேண்டுகோள். ஐ. நா. வை நன்கு உணர்ந்து கொள்ளும்படி மக்களுக்கு உதவுங்கள். இந்த ஸ்தாபனத்தின் பின்னணி வரலாறு, அமைப்பு ஆகிய விவரங்கள், அனைத்தையும் மக்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்து விட்டால் சமாதானத்தையும், நீதியையும், இணக்கத்தையும், மகிழ்ச்சியையும், மறக்க முடியாத, ஒருவகை லட்சியத்தையும் பிரச்சாரம் செய்யும் துணிவுடைய, ஆனால் தோல்வியடையாத இந்த ஸ்தாபனத்தையும் அதில் பொதிந்துள்ள கொள்கையையும் எல்லாரும் பின்பற்றி, அதை மனிதகுலத்துக்குக்கான மாபெரும் அன்பளிப்பாக வாழ்த்தி வரவேற்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. தமிழர்களாகிய நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே "யாதும் ஊரே! யாவரும் கேளீர்" என்பது நமது கவிஞர் பாடி இதைத்தான் கற்பித்தார். ஆகையால், நாம் இந்த ஸ்தாபனத்துக்கு உறுதுணையாக நின்று வழிவழியாய் வந்த லட்சியத்தை எய்துவதில் உதவி புரிவோம்.