பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தமிழகத்தின் அறிவுக் கோட்டம் ஆளுநர் அவர்களே! இணைவேந்தர் அவர்களே! துணை வேந்தரவர்களே! பேராசிரியர் பெருமக்களே! இன்று பட்டம்பெற வந்துள்ள இளந்தோழர்களே! மதுரைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப்பேருரை நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றமைக்குப் பேருவகை கொள் கின்றேன்.

இப்பல்கலைக் கழகம் தொடங்கி ஓராண்டே ஆகிறது. இதுவே முதல் பட்டமளிப்பு விழாப் பேருரையாகும். இந்த வாய்ப்பு நான் பெற்றிடச் செய்த பல்கலைக் கழகப் பெரி போர்கட்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் கின்றேன். நான்மாடக்கூடலில் நிற்கின்றேன்; நானிலம் போற் றிடும் தனிச் சிறப்பினைப் பெற்றுத் தமிழகத்தின் அறிவுக் கோட்டமாய்த் திகழ்ந்தது மதுரையம்பதி என்ற எண்ணம் தந்திடும், எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கின்றேன். தமிழ் வளர்த்த பாண்டியர்களை எண்ணாத இதயம் எதுவுமில்லை! வாளர் இங்கு நின்றிடும் எவருக்கும், அன்றொரு நாள் அறி அரண் அளிக்க அரசாண்ட பாண்டியப் பெரு மன்னர், தமிழ் வளர்த்து, தமிழர்தம் தனிச் சிறப்பினைக் காத்து புகழ்க்கொடி நாட்டி, தரணி மெச்சக்கோலோச்சி வந்த வரலாற்று நினைவு ஏழாமலிருக்க இயலாது. நெஞ்சு நெக்குருகும் நினைவலைகள் எழத்தான் செய்யும்.