நிலையும் நினைப்பும்
12
கலந்துவிட்டதாகவே ஒப்புக்கொள்ளுகிறேன், வாதத்திற்காக, இதற்கு (கலப்பதற்கு) முன்பு? பல்கலைக்
கழகத்திலே நீங்கள் படிக்கிற பாடம் ஆரியர் என்றோர்
இனம் அல்லது கூட்டம் பன்னெடும் ஆண்டுகளுக்கு
முன்பு ஆசியாவிலிருந்து இந்தியா நோக்கி வந்தது.
யாரும் மறுப்பதில்லை. வரும்பொழுது அவர்கள் ஆடு.
மாடு ஓட்டிக்கொண்டு வந்தார்கள்; மறுக்கவில்லை.
ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் சில நாட்களில் சிந்து நதி
தீரத்தில் ஆரியாவர்த்தத்தைப் படைத்தார்கள்:
மறுக்கவில்லை. அப்பொழுது தெற்கே தமிழ்நாடு
இருந்தது ; மறுக்கவில்லை. தமிழ் நாட்டில் இருந்தவர்கள் தமிழர்கள் ; மறுக்கவில்லை. தமிழர்களுக்கென்று
ஒரு தனிப் பணிபு இருந்தது ; இதையும் மறுக்கவில்லை.
தமிழ் நாட்டில் குடியேறிய ஆரியர்கள் சற்றேறக்
குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன் வந்தனர்; இதையும் மறுக்கவில்லை. ஆகவே, ஆரியர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள்; வந்தபொழுது தமிழர்கள் உன்னத நிலையில் இருந்தனர்- என்பதை எவரும் மறுப்பதில்லை. யாவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து என்ன எண்ணியிருப்பார்கள்? பச்சைப் புற்றரைக்கே பஞ்சமான நாட்டிலிருந்து வந்தவர்களின் மனதிலே, தமிழகத்திலுள்ள மாந்தோப்புகளும் மண்டபங்களும், சாலைகளும் சோலைகளும், குன்றுகளும் கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களைத் தந்திருக்கும்? நிச்சயம் தமிழர்களைப் பார்த்து அவர்கள்