150 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா *
ஆர்க்காடு நவாப் முகம்மது அலி, கிழக்கிந்திய கும்பினியர் ஆகியோரால் வரிவசூல் செய்ய 1757ல் அனுப்பப்பட்ட கான்சாகிபு வசூலித்த வரியை மக்கள் நலப்பணிகட்கு செலவிட்டார். கான்சாகிபு பற்றி நன்கு ஆய்ந்த பேராசிரியர் நா. வானமாமலை "திருநெல்வேலி சீமையை வென்ற பெருமையை பறைசாற்றி இச்சீமையின் வரிக்குத்தகையை 7 லட்சத்திற்கு கான்சாகிபு கும்பினியாரிடமிருந்து பெற்றுக் கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆர்க்காடு நவாபு முகமதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டு போய்விட்டான். யூசூப்கானது நிலைமை வலுவாகி இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாக பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படை திரட்டினான். பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியை நாடினான். அவனது தலைமையில் உள்ள வீரர்களது தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர் அலியிடமிருந்தும் அவன் இராணுவ உதவிகளைப் பெற்றதாக பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோயில்கட்கும், மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கி கல்வெட்டுக்களில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி
باع اسم قبل وبن عامر اورانی نخان وی
در کاره بوسن خان نکر جون بند کرده اید پوره زمان و
HOPPN
வகு தயமிர்க்கு
பிரயபுபள வியாச லசக்தாலகுமா
எனசெருயிமாமுகட்டிவையடுத்து