உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


பிறசாதியினரும் தமிழகத்தில் தற்காலத்தில் வாழ்ந்து வரினும், இன்னோர் பழந்தமிழ் மக்களல்லாராதலின் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டைக் கேற்புடைத்தன்றென்க.

இனித் தொல்காப்பியத்திற் கூறப்பெற்றுள்ள பல்வகைக் கூட்டத்தினருள் 'மழவர்' என்பார் கூறப்படவில்லை. எனவே அன்னவர் மேற்குறித்துள்ள பிரிவினருள் அடங்கியுள்ளவராதல் வேண்டும். இன்றேல், பிறநாட்டினின்றும் போந்து தமிழகத்தில் குடியேறியுள்ள வேறு தேயமக்களாதல் வேண்டும். ஈண்டு தனையாராய்ந்து உண்மை காண்போம்.

சாதிப்பெயர், இடம்பற்றியும் தொழில்பற்றியும் உண்டாகுமென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். எனவே, சேரநாட்டில் வசிப்போர் எல்லோரும் சேரரும், பாண்டிய நாட்டில் வசிப்போர் எல்லோரும் பாண்டியரும், சோழநாட்டில் வசிப்போர் எல்லோரும் சோழரும் ஆதல் வேண்டும். ஆயின். பண்டைநூற்களிலும் கல்வெட்டுக்களிலும் பயின்றுள்ள சேரர் பாண்டியர் சோழர் என்ற இடத்தாற்போந்த குடிப்பெயர்கள் அந்நாடுகளில் தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்துவந்த அரசர் குலத்தினரைக் குறிக்கின்றனவேயெனின், கூறுவாம்; ஒரு நாடடின் வசிப்போர் பல்வகைக்குலத்தினராயினும். அந்நாட்டின் அடியாகத் தோன்றிய குலப்பெயர்கள் அந்நாட்டில் தொன்று தொட்டு அரசுரிமையெய்தியுள்ளார்க்கே யுரியதாகும். பிறகுலத்தினரிருப்ப,சேரர்,பாண்டியர், சோழர் முதலிய நாட்டடியாகப் போந்த குலப்பெயர்கள் அந்நாடுகளிலுள்ள அரசர் குலத்தினரையே அவ்வாறு குறிப்பது சிறப்புப்பற்றியே யாமெனவுங்கொள்க.

இனி, அந்நாடுகளில் வசிக்கும் பார்ப்பார், வணிகர், வேளாளர் முதலிய பிறகுலத்தினரைக் குறிக்குங்கால் அந்நாடுகளின் அடியாக மருவிப்போந்த பெயரோடு அன்னோரது குலப்பெயரையும் இணைத்துக் கூறுதல் வழக்காறாக உள்ள தென்பதை யாவரும் அறிவர். உதாரணமாக, சோழ நாட்டில் வசிக்கும் பார்ப்பார், வணிகர், வேளாளர் என்ற இன்னோர் சோழியப்பார்ப்பார், சோழியச்செட்டி, சோழிய வேளாளர் என்றழைக்கப்பெறுதல்காண்க. இதுகாறும் கூறிய வாற்றால்