உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

133


மேற்கூறிய இரண்டு சரித்திரங்களும் வெவ்வேறென்று கூறிப் போந்தனர்.[1]

இனி, இவ்விருசரித்திரங்கட்கும் பற்பலவேறுபாடு களுண்மையால், இவற்றைக் காய்த லுவத்த லகற்றி ஒப்பநாடி ஒருங்கே யாராயும் ஆன்றோர் பலர்க்கும் இவை வெவ்வே றென்பது நன்குவிளங்குமென்க.

திருப்புறம்பயபுராணம் 6-வது சருக்கத்திலும் திருவிளையாடற் புராணம் 64 வது படலத்திலும் கூறப்படும் சரித்திரங்களிரண்டும் ஒன்றேயாயினும் சிற்சிலவிடங்களில் ஒன்றற்கொன்று முரணுகின்றமையால், அவற்றின் வன்மை மென்மை களை ஈண்டு ஆராய்கின்றேன்.

1. திருவிளையாடற்புராணத்தில் அரவுகடித்திறந்த வணிகனுக்கு ஆருயிரளித்துத் திருமணஞ்செய்வித்தவர் திருஞான சம்பந்த சுவாமிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.[2] ஆனால், திருப்புறம்பயபுராணத்தில் அங்ஙனம் செய்தருளியவர் புறம்பயத்துறை இறைவனேயென்று கூறப்பட்டிருக்கிறது.[3] இவற்றுள் எது வன்மையுடைத்தென்பதை ஆராயவேண்டும்.


  1. மருத்தயில்பாப்புக்காப்புவள்ளலைமனத்துவைத்துத்
    தருக்கமார் காழிவேந்தர் சடையெனும் யாப்பெடுத்து
    விரைத்திருமருகறன்னில் வெவ்விடந்தீர்த்ததன்றித்

     -திருப்புறம்பயத்தலத்திற்றீர்த்தனர் திருக்கண் சாத்தி.

    வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் 62-வது படலம் 39-வது செய்யுள்.

  2. பரஞ்சோதியார் திருவிளையாடல் 64-வது படலம் 24 முதல் 32 வரை.
  3. கருணையாலிரங்கிக்கரும்படு சொல்லி கண்ணுதற்கடவுளை நோக்கித்
    தருணமானனையாள் கணவனையிழந்து தவிப்பது கண்டுளஞ்சகியேன்
    வருணமார்வணிகனா ருயிர்மீள வழங்கிட வேண்டுமென்றிரப்ப
    முரணிலாவிடங்கள் தீர்ப்பவன், போலமுதல்வனு மாங்குவந்தடைந்தான்.

    - திருப்புறம்பயபுராணம் 6வது சருக்கம் 35வது செய்யுள்.

    உருத்தவெவ்விடத்தை நீக்கலும் வணிகனுறங்கினன் போல்விழித் தெழுந்தான் பெருத்தபூண்டு முலையாண் மங்கலநாணும் பெற்றனள் பெரியமாலிமையோர் கரத் தனென்றிரப்பக்கடுவிடமுண்டு கமலமான் முதலியமடவார்.

    திருத்துமங்கலநாணீந்தவனிந்தச்சில் விடந்தீர்ப்பது மரிதோ. மேற்படி மேற்படி மேற்படி. 36.

    கசிந்தவெம்பிரான்றன்னுருவெளிப்படக்காட்டி
    வசந்தகுத்தன் மாமகடனைவணிகனை மகிழ்ந்தே
    விசைந்தநல்லியாழ்க்காந்தருவத்தினர்விவாக
    மிசைந்துகாதலித்திருவருமணத்திரென்றிசைத்தான்.மேற்படி மேற்படி 39.