ஆய்வுக் கட்டுரைகள்
139
சாயாமலதிவீரபாண்டியன் சொல்லும்
தமயந்திசரித்திரநைடதமுஞ் சொன்னார்
சுயமாகாது திகவிகள்சுத்தப் பொய்தான்
தொடுகவிமாணிக்கவாசகர் சொன்னாரே
தேவாரமானதிருவாசகத்தைச்
செகத்தோர்கள் படித்து மெத்தத்தியங்கினார்கள்
பேயானவாண்டிகட்குப் பிழைப்புக்காகப்
பேசிவைத்தார்மற்றொன்றும்பிச கேயில்லை
மேலேவரைந்துள்ள செய்யுட்களில் வியாசர்பாரதமும், கம்பர் இராமாவதாரமும், அதிவீரராமபாண்டியர் நைடதமும், சைவ சமயா சாரியர் நால்வரும் திருவாய்மலர்ந்தருளிய தேவார திருவாசகங்களும், மக்கட்குப் பயன்படாப் பொய்ந்நூல்களென்று சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள், இராமாவதாரமியற்றி யருளிய கம்பர்.(1120 கி.பி. 1200 கி.பி) கி.பி. 12-ஆம் நூற்றாண்டினிடையில் விளங்கியவராதல் வேண்டுமென்று சேது ஸமஸ்தானத்தின் வித்வான் ப்ரும்மஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்கன் செந்தமிழ் 3-ஆம் தொகுதி 6-ஆம் பகுதியில் நிரூபணஞ் செய்துள்ளார்கள். தமிழில் நைடதமியற்றி யருளிய அதிவீர ராமபாண்டியரே, கூர்மபுராணம், இலிங்க புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியருளிய அரசரேறென்ப. இம்மன்னர் பெருமான், சகம் 1486-ல் தென்காசியில் முடிசூட்டப் பெற்று சகம் 1514 வரை ஆட்சிபுரிந்தன ரென்று தென்காசிக் கோயிற் கோபுரத்திற்காணப்படுஞ் சிலாசாசனங்கள் அறிவிக்கின்றன.[1] ஆகவே, இவ்வரசர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டினிறுதியில் (கி.பி. 1564 - கி.பி. 1592) வாழ்ந்தவராதல் வேண்டும். இனி, திருக்குறளருளிய திருவள்ளுவனார் தம்நூலை, அக்காலத்தே தென்மதுரையகத்துத் தமிழுக்கரசராய் வீற்றிருந்தருளிய மூன்றாஞ் சங்கப்புலவர் நாற்பத்தொன் பதின்மரது முன்னிலையில்
- ↑ Travancore Archaeological Series No. VI. p.p. 26