ஆய்வுக் கட்டுரைகள்
141
“அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்” (3-வது அதிகாரம் 10)
“மறப்பினு மொத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்“ (14-வது 4)
“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (55-வது 3)
“ஆபயன் குன்றுமறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்“ (56-வது 10)
என்னும் குறள்வெண்பாக்களா ளினிதுவிளங்கும்.
இனி, ஞானவெட்டியுடையார் தம் நூலில் தம்பெயர் திருவள்ளுவ ரென்றும், தாமே 1300 குறள்வெண் பாக்களையுடைய திருக்குறளியற்றி வைத்தவரென்றும் கூறியிருத்தல் ஈண்டுக் கவனிக்கத்தக்கது.[1] இவ்வாசிரியர் திருவள்ளுவரென்னும் பெயருடைய வராயிருக்கலாம். ஆனால், திருக்குறளைத் தாமியற்றியதாகக் கூறல் சிறிதும் பொருந்தாது. தம்மைத் தத்துவங்களுணர்ந்த சிறந்த ஞானியென்றும் தம்நூலே உலகிற்குப் பயன்படக்கூடிய அரிய நூலென்றும் வாய்ப்பறை சாற்றிச் செல்கின்ற இவ்வாசிரியர் இங்ஙனம் பொய்கூறற்கு எங்ஙனம் துணிவுற்றனரோ அறியேம். அன்றியும், உலகிற்குபகார மாய்த் திருக்குறளைத் தாமியற்றி வைத்ததாகச் சிறிதும் அஞ்சாது பொய்கூறுகின்ற இந்நூலுடையார்,
”பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று”
”எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு”
”உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்லா முளன்”
”மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை"
- ↑
“பெருநூல்களாயிரத்தைந் நூறிந்நூல்
முன்னமேயான் பாடிவிட்டேனாயிரத்து முந்நூறு
முடித்துவைத்தேன் குறளதுவாயுல கோர்க்காண்டே“ (ஞானவெட்டி 1737.)