உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 22

அவளும் திறம்படக் கையாண்ட அருமையை நான் காணா மலில்லை. உன்னை எதிர்பார்த்திருந்தால், பூண்டுத் தைலம் உட்கொண்டிருக்க மாட்டேன். சந்தித்திருப்பேன் என்ற குறிப்பு அதில் தொக்கி நின்றது.'

என்ன பொருந்தாப் புளுகுக் கதை இது?' என்று இளவரசன் கேட்டான். அனைவரும் இது கேட்டுச் சிரித்தனர். 'இதை இவன் இட்டுக் கட்டித்தான் கூறியிருக்க வேண்டும்' என்றும் ஏளனம் செய்தனர். 'இப்படி ஒரு பெண் இருப்பாள் என்பதே நம்பமுடியாத செய்தி. இருந்தால் அத்தகையவள் ஓர் அரக்கியாகவே கருதப்பட முடியும். இத்தகைய கதை மூலம் எங்களுக்கு அதிர்ச்சியூட்டி விட்டாய் SAபு!' என்று எல்லாரும் அவனைக் கடிந்து கொண்டனர். அத்துடன் இதனினும் நல்லதாக நீ கட்டாயம் ஒரு கதை கூறியாக வேண்டும்' என்றும் வற்புறுத்தினர்.

'இதைவிட நல்லதாக எந்தக் கதை தான் இருக்க முடியும்? என்று கூறியவாறு ஷிகிபு அறையை விட்டே வெளிச்சென்று விட்டான்.

உமா நோ கமி இப்போது தொடங்கினான்.

'ஆடவரிடமும் சரி, பெண்டிரிடமும் சரி இப்போது ஒரு போக்கு வளர்ந்து வருகிறது. ஏதோ ஒரு சிறிது கற்றுவிட்டால், உடனே தங்கள் அறிவைப் பெரிதாக்கிக் காட்டிவிட வேண்டுமென்று விரும்பிவிடுகிறார்கள். ஆனால் மூன்று வரலாறுகளையும் ஐந்து இலக்கண இலக்கியங்களையும் கற்று விடுவது கூடப் பண்பாட்டுக்கு வழி வகுத்ததாக ஆகிவிட மாட்டாது. அதே சமயம் அவற்றை உணராத ஒரு பெண்பாலர் கூட எல்லாப் பொது அறிவும் தனிமுறை அறிவும் பெறமுடியாதென்று கூறுவதற்கில்லை. இதை அடைய அவள் முறையாகப் படிக்க வேண்டாம். கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொறுக்கித் தேர்ந்தால் போதும். அதன் பின் இயற்கை அறிவைமட்டும் தளரவிட வில்லையானால், அவள்தான் எதிர்பாராத அறிவுநலங்கள் எய்தப் பெறுவது உறுதி.