உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

||-

அப்பாத்துரையம் - 22

மறைந்தன. அவளைப்பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அவன் அவனைப் பற்றித் தன் பேச்சைத் திருப்பினான்.

'பெரியீர், உங்களுடன் இங்கே யார் யார் வசிக்கிறார்கள்' என்று அவன் தொடங்கினான். தன் ஆர்வத்துக்கும் அவன் ஓர் விளக்கம் கூறினான். 'இவற்றை நான் அறிய விரும்புவதற்கு ஒரு காரணம் உண்டு. நான் கனவில் இவ்விடத்தை ஒரு தடவை கண்டிருக்கிறேன். அதையே திரும்பவும் நனவில் இங்கே வந்து கண்டபோது வியப்படைந்தேன்.' என்றான். துறவி சிரித்தார். 'உரையாடலிடையே உங்கள் கனவு திடீரென்று நினைவுக்கு வந்துவிட்டதுபோலும்! ஆயினும் இந்தக் கேள்வியில் நீங்கள் எதிர்பார்க்கிற நம்பிக்கை இல்லாது உவர்ப்பு ஏற்பட்டுவிடும் என்றே அஞ்சுகிறேன். அசேச்சி நோ தைநகன் என்பவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். அவர் இறந்து நெடுநாளாயிற்று. அவர் என் தங்கையை மணஞ்செய்து கொண்டார். அவர் மாள்வுக்குப்பின் என் தங்கை உலக வாழ்வின்மீது வெறுப்படைந்து அதைத் துறந்துவிட்டாள். அச்சமயம் எனக்கு ஏற்பட்டிருந்த சில சிக்கல்களால் நான் தலைநகர் செல்ல முடியவில்லை. ஆகவே அவள் என்னுடன் இந்த ஒதுங்கிய வாழ்வில் துணைபெற வந்து சேர்ந்தாள்.'

கெஞ்சி இப்போது இடையிட்டுக் கேள்விகேட்டான். 'அசேச்சி நோ தைநகனுக்கு ஒரு புதல்வி இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது து உண்மைதானா? இந்தக் கேள்வியைத் தவறான எந்த கேட்பதாகக் கருதவேண்டாம்.

எண்ணத்துடனும்

நான்

ஆகவே மன்னிக்கக் கோருகிறேன்' என்றான். துறவி மேலும் தொடர்ந்தார்.

‘அவருக்கு ஒரே புதல்விதான். அவள் பத்து ஆண்டுகளுக்கு முன் உயிர் நீத்தாள். அவள் தந்தை அவளை அரண்மனைப் பேரவையில் முன்னிலைப்படுத்த எண்ணி இருந்தார். ஆயின் அவள் இதற்கு இணங்கவில்லை. அவர் இறந்தபின்னரோ அவளை என் தங்கையே பேண வேண்டியிருந்தது. எவனோ ஒரு கவைக்குதவாத இடையீட்டாளன் மூலம் அவள் இப்புதல்வியை ஹியோபுகியோ இளவரசனிடம் அறிமுகப்படுத்தி, இளவரசன் காதற்கிழத்தியாக விட்டாள். ஆனால் இளவரசன் மனைவி