160
- மறைமலையம் - 8 –
வித்துவான்கள் மகிழ்ச்சியடையும்
ய
வரையும்,
நாடகப்பிரயோக சாமர்த்தியத்தை நல்லதென்று நான் நினைக்கமாட்டேன். நன்கு பயின்றவர்களுடைய இருதயம் பலனுடையதாயிருந்தாலும் தன்னிலே தளருகின்றது.
சாணக்கியசதகம்
வடமொழியிலுள்ள இந்நூலிலே அநேக நற்புத்திகள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள்ளே சில இங்கே எழுதப்
படுகின்றன.
வித்துவானும் அரசனும்
வித்துவானுடைய தன்மையும், அரசனுடைய தன்மையுந் தம்முள்ளே ஒருகாலுஞ் சமத்துவமுடையனவல்ல; அரசன் தன் தேசத்திலே பூசிக்கப்படுகிறான்; வித்துவான் எவ்விடத்திலும் பூசிக்கப்படுகிறான்.
கல்வி
நட்சத்திரங்களுக்குச் சந்திரனே அலங்காரம்; பெண்களுக்கு நாயகனே அலங்காரம். பூமிக்கு இராசாவே அலங்காரம்; எல்லாச்சனங்களுக்குங் கல்வியே அலங்காரம்.
சந்திரனாலே நட்சத்திரங்களும், நாயகனாலே பெண்களும், அரசனாலே பூமியும், கல்வியாலே சகல சனங்களும் சிறக்கும் என்பது கருத்து.
விசுவாசம்
நகமுள்ள மிருகங்களிடத்திலும், நதிகளிடத்திலும், கொம்புள்ள மிருகங்களிடத்திலும், கைகளிலாயுத முள்ளவர் களிடத்திலும், பெண்களிடத்திலும், இராசகுலத்தவர்களிடத் திலும் நம்பிக்கை செய்தலாகாது.
பிராணனைக் கெடுப்பன
காய்ந்த
முடை
வயோதிக
றச்சியை உண்ணுதலும், யபெண்ணைப்புணர்தலும், கந்நிராசியினிற்குஞ் சூரியகிரணத்தை யடைதலும், புதுத்தயி ருண்ணலும், உதயகாலப் புணர்ச்சியும், நித்திரையுமாகிய பிராணனைக் கெடுப்பனவாகும்.
ஆறும்