உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
295

சொன்னார். ‘நம்தலைவர் குதிரைமேல் ஏறுகின்றார்; இதோ அதனை ஊர்ந்து செல்கின்றார்!’ என்று கூவினாள். பின்னும் அவ்வம்மையார் ‘ஓர் இமைப்பொழுதும் அவரைவிடாதே’ என்று கூவினார். ‘ஐயோ! அவர் மிகவும் விரைவாய்ச் செல்கின்றாரே! எனக்கோ களைப்பாய் இருக்கின்றது!’ என்று அப்பெண் பெருமூச்செறிந்தாள். ‘விடாதேசெல்’ என்று பின்னும் அத்தலைவியார் கட்டளையிட்டார். ‘நம் தலைவர் இப்போது இன்னும் மற்றத் தலைவர்களோடு இருக்கிறார். எத்தனையோ படையாட்களும் குடிமக்களும் நிறைந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு பெரிய வேடிக்கை நடக்கின்றது. யாரோ ஒரு பெரிய தலைவர் பயணமாய்ப் போகிறார்.

அவர்கள் எல்லாரும் தண்ணிருக்கு அருகே நிற்கிறார்கள்.’ என்று அப்பெண் கூறினாள். ‘அப்படியானாற் சிறிதுநேரம் ஓய்வாய் இரு. ஆனால், நின் கண்கள் நம் தலைவரைவிட்டு இப்புறம் திரும்பாதிருக்கட்டும்’ என்று அத்தலைவியார் சால்லினர். அவ்வாறே அவள் சிறிது நேரம் பேசாதிருந்து பின்னர்த் ‘தண்ணீர்க்கு அருகிலுள்ள ஒரு பெரிய வீட்டினுள்ளே நம் தலைவர் நுழைகின்றார். அவர் இப்போது ஓர் உடுப்பு அறைக்குட்செல்கின்றார். தம்முடைய உடைகளை மாற்றுகின்றார். அவர்தம் படைக்கோல உடைகளெல்லாம் ஒரு தகரப் பெட்டியினுள்ளே வைக்கப்படுகின்றன; ஆனால், பணப்பையுள்ள அவரது அரைப்பட்டிகைமட்டும் வெளியேவிடப்பட்டிருக்கின்றது; கடலுக்கு அணித்தாயுள்ள அவ்வீட்டின் உடுக்கும் அறையின்கண் உள்ள ஒரு முளையிலே அது தொங்குகின்றது’, என்று மொழிந்தாள்.

அதனைக் கேட்டதும் அவ்வம்மையின் கணவர் ‘ஓ! அது தான் யாட் விடுதி’ என்றுரைத்துத் தம் ஏவலாளை யழைத்து ‘உடனே ஓர் ஆளையனுப்பி, அவ் அரைப்பட்டிகை அங்கே விடப்பட்டிருக்கின்றதாவென்று பார்த்து வரச்செய்’ என்று கட்டளையிட்டார். அவனும் மற்றுஞ் சிலரோடு அவ்விடத்திற்குப் போயினாள்.

அப்படைத்தலைவர் ‘உண்மையாகவே யான் அதனை யாட்விடுதியில் விட்டு விட்டேனோ வென்று வியப்புறுகின்றேன். யான் கடைசியாக அதனை அணிந்திருந்தது ரிப்பன்பெருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/328&oldid=1626560" இலிருந்து மீள்விக்கப்பட்டது