238
மறைமலையம் – 9
விளக்கம் பெற வைக்கிறார்.
தலைவியைப் பிரிதல் வகையால் உண்டாகும்
உள
வெப்பை அடையமாட்டேன்; அவன் கோலின் தண்மை போன்ற தலைவியின் கூடுதலை இழக்கமாட்டேன் என்று சொல்கிறான்.
வாழ்வியல் நிலை இவ்வாறானால் சிறக்குமா?
“வினையே ஆடவர்க்கு உயிரே" என்பது தொன்முறை வாழ்வியல். ஆதலால் வினைமேல் செல்லாமல் தடையுறல் ஆகாது.அதனால் செல்லேன் எனச் சொல்லி அவளை அமைதிப் படுத்தி, வினை செயல் இன்றியமையாமை, பொருளின் இன்றியமையாமை என்பவற்றைத் தக்கவகையில் எடுத் துரைத்துப் பிரிதற்குரிய உளவியல் உத்தி இத்தகு படைப்பாகும். “செல்லேன் என்னல் சொல்லாமைக்கு அன்று; செலவு உட ன் படற்குச் செய்யும் முன்முயற்சியாம்" என்பது வாழ்வியல் இலக்கணமாக வகுத்த தமிழ் அறவோர் காட்டிய முறைமை இஃதாம்.
பாலைப் பகுதியை இணைத்துக் காட்டுக.
"முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
66
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன்”
'திருமாவளவன் தெவ்வர்க் கோக்கிய வேலினும் வெய்ய கானமவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே"
இச்சுருங்கிய
வேண்டுமா?
அகத்தை
விரிக்க
இவ்விரிந்த
புறம்'
வேண்டும்; வேண்டுவ துணர்ந்தே பாடினார்.
புணர்தலாம் கூடியிருத்தலுக்குக், “குறிஞ்சி கூதிர் யாமம்”
என்றார் தொல்காப்பியர். நாளில் யாமம் என்பது எவ்வளவு பொழுது? மற்றைப் பொழுது எவ்வளவு?