உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் - 32

அலைகள் புகுந்து பொசுக்கத் தொடங்கிவிடும். அவன் இன்னொரு பெண்ணை மணப்பதானால், அப்பெண்ணின் கழுத்தில் மாலையிடும் கணமே, நீ கடல் நீரில் நீராக நுரை வடிவமாய்விடுவாய், இவற்றை எல்லாம் நன்கு சிந்தித்து உன் கருத்தை மாற்றிக் கொள்” என்றாள்.

அத்தையின் எச்சரிக்கை கேட்டு அவள் நடுங்கவில்லை. அது உண்மையில் அவளுக்குப் புது நம்பிக்கையையே ஊட்டிற்று. 'மனித இனப் பெண்ணாவது, இடர் நிறைந்த காரியம்தான். ஆனால் அது முடியாத காரியமன்று. இளவரசனைப் பெறுவதில் இடர்கள் மிகுதி தான், ஆனால் பெறவழியுண்டு. பெறாவிட்டால் கூட, அந்நிலையில் நீண்ட நாள் துன்ப வாழ்வு வாழ வேண்டியிராது. நுரையுடன் நுரையாய்த் தன் முன்னோர்களிடம் தஞ்சம் அடைந்து விடலாம்.' இந்த எண்ணங்கள் அவளுக்குப் புதிய தெம்பு கொடுத்தன. இளவரசனுக்காக இத்தனை ர்களையும் வரவேற்கவே அவள் துணிந்தாள்.

னி

'அத்தை, உங்களையும் என் அன்புத் தமக்கையரையும் விட்டுப் பிரிய நான் எண்ணவில்லை. ஆனால், இளவரசனில்லாத கடலுலகில் நான் இனி ஒரு கணமும் அமைதியுடன் வாழ முடியாது. உங்கள் இன்பங்களில் நான் பங்கு கொள்ளவும் முடியாது. ஆகவே நான் என் வழியில் செல்வதுதான் எல்லாருக்கும் நன்று. நான் மனித உருவடையும் வழி யாது? அதை எனக்கு விரைவில் கூறுங்கள். அதன் பின் ஆவது ஆகட்டும், என் ஆவல் நிறைவேறினால், என் இடர்களை நான் எப்படியும் தாங்கிக் கொள்வேன். உங்களை என்றும் மறக்க மாட்டேன். நிறைவேற வில்லையானால், உங்கள் அன்பில் கலக்க முடியாத இந்த வேல்விழியின் துயரத்தைவிட, நுரையாய் உலவும் வேல்விழியின் துயரம் உங்களுக்குப் பெரிதன்று; அது, ஆறுதலாகக் கூட அமையும்" என்றாள்.

பொன்னாவிரை அவளைத் தன் கண்ணீரால் ஆட்டினாள். “அம்மா, உன் விருப்பம் அதுவானால், நான் உதவத் தடையில்லை. தென்மா கடலின் நடுவில் ஒரு பாரிய நீர்ச்சுழி அழன்று கொண்டிருக்கிறது. அது ஒரு நீண்ட புழையாய் அடிநிலக் கடலுக்குச் செல்கிறது. புழையின் நாற்புறமிருந்தும் பாரிய நீர்ச்சிலந்திகள் புழையில் செல்லும் உயிர்களை வலைவீசிப்