இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
130
<poem>
பாரதத்துப் போர்க்களத்தில் கர்ண னோடு
- பார்த்தனவன் ஆர்த்தெழுந்து மோதும் போது,
சாரதியாய் வீற்றிருந்த கண்ணன், தம்பால்
- சரம்பாய்ந்து வருவதனைத் தவிர்ப்ப தற்கு,
மாரதத்தைக் கீழழுத்தித் திறமை யாக
- மைத்துனனைக் காத்தபழங் கதையைப் போல
வீரதத்து வந்தெரிந்து வினைசெய் அண்ணா
- விடுதலையைக் கைவிட்டுக், கழகம் காத்தார்!