இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
மறைமலையம் - 28
ஓம் திருச்சிற்றம்பலம்
சிவஞான போதத் தொன்மைச் சிறப்பு
வேதம் பசுவதன்பால் மெய்யா கமம்நால்வர் ஓதுந் தமிழதனின் உள்ளுறுநெய் -- போதமிகு
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம்.
வேதம் : திருக்குறள். ஆகமம் : திருமந்திரம். நெய் : வெண்ணெய்
வெண்பாத் தொகை
ஐயொருப தேழேழும் ஆங்கமைந்த நாலாறும் ஐயொன்ப தோரெட்டோ டாறாறும் -- துய்யஎட்டோ டெண்பத்து மொன்றுஞ் சிவஞான போதத்தின் மன்னருளும் வெண்பா வகை.
மெய்கண்டான்
கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும்--வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்தின் கண்.
திருச்சிற்றம்பலம்