உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

19

உண்டு. அக்காலவெல்லையில் பயன்தந்து நின்று விடும் அப் பயிர்கள். ஆனால் திருமணம் வழிவழியாகக் கொண்டும் கொடுத்தும் பெருக்கத்தோடேயே வருவது. ஆகலின், ஆயிரங் காலத்துப் பயிர் எனப்படுவதாயிற்று.

பயிர் என்பது உயிர்ப்பொருள். அவ்வுயிர்ப்பொருளொடு உணர்வு அறிவு இயக்கம் ஆகியவெல்லாம் கூடிய பயிர் மக்களாம் பயிர். அப்பயிர்த்தொடர்பு, காலமெல்லாம் செழித்து வளரக் கருதிய, வழக்கில் இருந்து வந்தது ஆயிரங்காலத்துப் பயிர் என்பது. ஆலைச்சரக்கு - அரும் பொருள்

ஆலை, தொழிற்சாலை ; கலைநலமும் கவினும் அமைந்தது ஆலைப்பொருள். அப்பொருட்கவர்ச்சியால் விலையாகும் தன்மையது. ஆலைச்சரக்கு முன்னாளில் சீமையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமையால் சீமைச் சரக்கு எனவும் படும். சீமை எண்ணெய் என மண்ணெண்ணெய் குறிக்கப்படுதலும் அறியத்தக்கது. சிலர் தங்கள் பொருளை உயர்த்தியும் விலையைக் கூட்டியும் சொன்னால் “ஆமாம் ; ஆலைச்சரக்கு ; இந்த விலை சொல்ல வேண்டியதுதான்” என்று ஒதுக்குவர். ஆலைச் சரக்கு என்பதற்குக் கிடைத்தற்கரிய அரும் பொருள் என்பது பொருளாம். ஆளான ஆள் - பெரிய ஆள்

ஆள் என்பது ஆளும் திறம் உடைமையால் பெற்ற பெயர் ஆள் எனின் ஆளுமை வேண்டும். பெண்ணும் ஆளே! ஆணும் ஆளே! எத்தனை ஆள் என்பதில் ஆண் பெண் பாற்பாகுபாடு இல்லை என்பது அறிக. ‘ஆள்' இயல் பாலுக்குத் தக அமையும் அவ்வளவே. அவ்வப்பாலின் இயலில் மிக ஆளுமை உடையார் ஆளான ஆள்' எனப்படுவார். ஆள்களில் ஆள் என்பது தேர்ந் தெடுக்கப்பட்ட ஆள் என்னும் பொருளதாம். ‘ஆனானப் பட்ட ஆள்' என்பதும் இத்தகையதே.

ஆனானப்பட்டவன் - மிகப் பெரியவன்

ஆனவன் என்பது பெரியவன் என்னும் பொருளது. ஆகி வந்தவன் என்பது போன்ற வழக்கு அது. ஆளாதல், பெரியவ ளாதல் என்பவற்றில் வரும் ஆக்கப் பொருள் ஆதல் போல ஆனவன்' என்பது வந்ததாம். ஆனவன் என்பது இரு முறை யடுக்கி ‘ஆனானப்பட்டவன்' என்றாகியது. ஆனானப்பட்டவ னெல்லாம். ஆலாகப் பறக்கும் போது இவனெல்லாம் எந்த

66