பாவாணர் கடிதங்கள்
1. தேடிச் சேர்த்த திரு
எதை எதையோ தேடித் தேடித் திரிந்தலையும் உலகத்தே, எய்ப்பினில் வைப்பாய் என்றும் இருக்கும் நுண்மாண் நுழை புல நூல்களைத் தேடித் தேடித் தொகுத்துத் தெளித்து ஆய்ந்த ஏந்தல் பாவாணர்! “தக்கார் தகவிலர் என்ப தவரவர், எச்சத்தாற் காணப்படும்" என்பதற்கு ஏற்ப, நூலெச்சத்தை நுனித்துணர் வால் தொகுத்து வைத்த நூலறி புலவர் பாவாணர்! அவர் அரும்பெரும் 'தட்டுப்பாடும். முட்டுப்பாடுமே பெட்டிப் பொரு ளெனக்' கொண்டிருந்த நாளிலும், “கடன் கொண்டும் செய்வர் கடன்” ன்” என்னும் பொன்மொழிக்கு ஏற்பத் தொகுத்துவைத்தவை விலைமதிக்க வொண்ணா விழுப்பொருள் நூற்பொருளேயாம்! அதுபற்றிய செய்திகளை அவர் கடிதங்கள் பரக்க விரித் துரைக்கின்றன.
பொது:
“என் சொத்தெல்லாம் என் நூல்நிலையமும் ஆராய்ச்சியுமே” “என் ஒரே உடமையாய் இருக்கின்ற ஆராய்ச்சி”2
“என் நூலகம் மட்டும் 7 நிலைப்பேழைகள் கொண்டது
66
"3
எனக்கு வீடுமில்லை; காடுமில்லை; இருப்புமில்லை; எடுப்புமில்லை; நாற்பானாண்டாக இரவு பகல் அரும்பாடுபட்டு ஆய்ந்த ஆராய்ச்சிதான் என் முழுவுடைமை
நூல் :
):
66
24
ருண சிந்தாமணி ஒருபடி உங்கள் புத்தக சாலையிற் கண்டேன். அதே எனக்கு வைத்திருங்கள்
1. 20-3-64(வி.அ.க.) 3.20-3-64(வி.அ.க.)
5. 24-7-31 (வ.சு.)
995
2. 20-3-64(வி.அ.க.)
4. 20 கும்பம் 1995 (வி.பொ.ப.)