ஞா. தேவநேயப் பாவாணர்
2
தமிழை ஆரியமாகத் தாறுமாறாய்த் திரித்தல்
தருவர் நாடாப்பதிவுப் பொறிபெற மாபதவி குமரி யிருந்தபடி கோணாமல் ஒலிப்பார்க்குக் கொடுத்த சிறுபணியும் எடுப்பர் செய்யார் உதவி.
3
விளக்கமின்றிக் கோவலன் வெறுங்கதை சொல்பவர்க்கே வெண்பொற்காசு பிரியும் ஐம்பதி னாயிரமும்
சு
சிலப்பதிகாரம் முற்றும் செவ்வையாய்க் கற்றவர்க்குச் சின்மொழிப் பாராட்டிற்கும் சேராது வாயுரமும்
4
ஆரியம் ஒழிகென்று வாயினால் சொல்பவர்க்கே அளிப்பது பல்வகையில் அடுக்கிய பல்லிலக்கம்
(கொடை)
(கொடை)
சீரிய முறையந்தச் செந்தமிழ்ப் பகைமுற்றும்
சிதைப்பவர் செயலையோ செவியுறவும் விலக்கம்
(கொடை)
5
மொழிப்புலமையும் பற்றும் முழுக்கவும் இல்லாதார்க்கு முதன்மையே பலகலைக் களஞ்சியம் நெடுகலும் கொழுத்தசம்பளம் பெற்றுக் குறுந்தமிழ் தொகுத்தபின் கொடுப்பாரே பெரும்பண முடிப்புகள் முடிவிலும்.
6
ஆயிரத்து முந்நூற்று முப்பதருங் குறளும்
பாயிரத்தோடு கற்றுப்பல தெள்ளுரை கண்டாலும்
கூயுற வினத்தோடு குலமத கட்சியென்னும்
ஆயநாற் சார்பிலன்றி அளியாரேசீர் ஒன்றாலும்
(கொடை)
(கொடை)
142. கட்சித் தலைவரைக் கண்மூடித்தனமாய்ப்
பின்பற்றுதல்
(இசைந்த மெட்டிற் பாடுக)
ப.
குறடென் பேதைகள் கொண்டதைவிடா
கொண்ட தலைவனை என்றுங்கைவிடா.
123