உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

3

இசைத்தமிழ்க் கலம்பகம்

ஆரியத்தை யுயர்த்தி அரிய தமிழைத் தாழ்த்தும் பேராசிரியர் அடிமைத் தனம்பிறர் பின்பற்றினாரே குடிமை.

4

கலப்பு மணத்தினிலும் குலத்தை யொழிப்பதிலும் நலத்துறை பிறிதிலுமே - பிராமணர்

நாயகர் எனச் சொலுமே.

5

தன்மான மொன்றுமின்றித் தன்னையே தாழ்த்திநின்று தானாகத் தமிழன் கெட்டால் - பிராமணர் தாமோ பொறுப்பதற் குற்றார்.

6

காலத்தோ டிடத்திற்கும் சாலத்தகுந்த மட்டும் கோலத்தைப் பூண எவரே – பிராமணர் போலத்தான் காணுபவரே.

பண் - (காம்போதி)

141. கொடை மடம்

ப.

கொடைமடம் முற்றியின்று கூர்கெடும் தமிழ்நாடு கொடிமயிலும் பெற்றில்லை கோலத்தேர் போர்வையோடு

து.ப.

தாளம்

ஈரொற்று

படைமடமுற் றுத்தமிழ் பழுதுபட்ட பிற்பாடு

பாவலர் பட்டபாடு பகரவே பற்றா தேடு

1

இலக்கண மறியாமல் எதுகைநடை வலித்தால்

எங்கெங்கும் பொன்னாடைகள் ஏராளமாய்க் குவியும்

மலக்கமில் தனித்தமிழ் மறைமலை யடிகளின்

(கொடை)

மாணுறு நூலுன் ஒன்றைக் காணவும்கண் அவியும். (கொடை)