122
3
இசைத்தமிழ்க் கலம்பகம்
ஆரியத்தை யுயர்த்தி அரிய தமிழைத் தாழ்த்தும் பேராசிரியர் அடிமைத் தனம்பிறர் பின்பற்றினாரே குடிமை.
4
கலப்பு மணத்தினிலும் குலத்தை யொழிப்பதிலும் நலத்துறை பிறிதிலுமே - பிராமணர்
நாயகர் எனச் சொலுமே.
5
தன்மான மொன்றுமின்றித் தன்னையே தாழ்த்திநின்று தானாகத் தமிழன் கெட்டால் - பிராமணர் தாமோ பொறுப்பதற் குற்றார்.
6
காலத்தோ டிடத்திற்கும் சாலத்தகுந்த மட்டும் கோலத்தைப் பூண எவரே – பிராமணர் போலத்தான் காணுபவரே.
பண் - (காம்போதி)
141. கொடை மடம்
ப.
கொடைமடம் முற்றியின்று கூர்கெடும் தமிழ்நாடு கொடிமயிலும் பெற்றில்லை கோலத்தேர் போர்வையோடு
து.ப.
தாளம்
―
ஈரொற்று
படைமடமுற் றுத்தமிழ் பழுதுபட்ட பிற்பாடு
பாவலர் பட்டபாடு பகரவே பற்றா தேடு
1
இலக்கண மறியாமல் எதுகைநடை வலித்தால்
எங்கெங்கும் பொன்னாடைகள் ஏராளமாய்க் குவியும்
மலக்கமில் தனித்தமிழ் மறைமலை யடிகளின்
(கொடை)
மாணுறு நூலுன் ஒன்றைக் காணவும்கண் அவியும். (கொடை)