உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

குன்றேபோலும் யானையைக் கொல்லவொண்ணும் எளிதாய்க் கொடும்பெருஞ் சுடுகலம் கொண்டே குறுமகனும்

குன்றாத அதிகாரம் குடவோலையாற் குடிகள்

கொடுத்தபின் கொண்டவரைக் குறைகூறுவ தெங்ஙனம்

121

(என்றும்)

3

குட்டக்குட்டக் குனிந்து கொடுக்கின்றவனும் முட்டாள் குனியக்குனிய மேலுங் குட்டுபவனும் முட்டாள்

இட்டுக்கட்டி மேன்மேலும் ஏமாற்றுவோனும் முட்டாள் என்றும் தெளியாமலே ஏமாறுவோனும் முட்டாள் (என்றும்)

4

இருவர் இணைந்து செய்யும் இழுக்கான செயலிலே ஒருவரையே கடிந்தால் ஒருபக்க மான குற்றம் அரிய தமிழ்த் தொண்டுகள் அழகாய்ப் பிராமணரே

ஆற்றியுள்ளார் சிலரும் தூற்றாதீர் குலம் முற்றும் (என்றும்)

140. தமிழப் பிராமணரைக் கெடுப்பவர் தமிழரே 'மகமதியர் குலத்தில்' என்ற மெட்டு

1

தமிழப் பிராமணரைத் தமிழரே கெடுக்கின்றார் தந்நலமாயிந் நாளுமே இன்றேல் அவர் தாமாய்த் திருந்த ஏலுமே.

2

இருபதாம் நூற்றாண்டிலும் ஏமாற்றுத் தொழிலிலே

-

ஈடுபடுத்தி யவர்மேல் - இழிவையே

ஏற்றிவிடுமே இவர்கோள்.