இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124
து. ப.
முரடுவாய்ந்து நன்மொழியைக் கொண்டிடா மூங்கை செவிடொடு தூங்கு குருடடா.
இசைத்தமிழ்க் கலம்பகம்
(குற)
கரடென் இந்தியை எதிர்த்து நின்றுவெங்
காவற் சிறையுளுங் கடுகிச் சென்றுபின்
முரண இந்தியை ஏற்றுக் கொண்டொரு
முறையின் றிப்பகர் தலைவர்க் கண்டுமே
143. தாழ்மையும் தாழ்வும் வெவ்வேறு
(இசைந்த மெட்டிற் பாடுக)
தாழ்மை வேறு தாழ்வு வேறு.
ப.
(குற)
து. ப.
ஏழ்மைப் பிறப்பும் எழுமை வீறு.
(தாழ்மை)
உ.1
வாழ்வில் வேண்டும் வணங்கும் பணிவு
வளரும் அதனால் வனப்பின் அணிவு
தாழ்வில் வேண்டும் தருக்கும் உயர்வு
தளரும் மானம் தழைக்கும் இயவு.
(தாழ்மை)
144. புலவரைப் போற்றாமை
ஏன் இந்த வாதம்' என்ற மெட்டு
ப.
ஏன் மாயமாலம் ஈகையர் கோலம்
ஏழைப்புலவர் இறந்தேகின காலம்.
து. ப.
நானிலத் திருந்த நாளெலாம் வறுமை
நலிந்தபோ தொருவரும் நல்காத சிறுமை.