இயனிலைப் படலம்
ஆள்' ஈறு அள் என்று குறுகும்.
எ-டு: அவள், மகள்.
று
13
அள்ளீறு பெற்ற மகள் என்னும் பெயரும் மாள் என்று மருவிப் பெண்பாலீறாம்.
எ-டு: வேண்மகள் - வேண்மாள், பெருமகள் - பெருமாள். (பெருமால் - பெருமாள் = விட்டுணு)
சில அன்னீற்று ஆண்பாற் பெயர்கள் பெண்பாலில் ஐ யீறாகத் திரியும்.
எ-டு: ஆசிரியன்
-
-
சிவை, ஆசிரியை, ஐயன்-ஐயை, சிவன் பண்டிதன் - பண்டிதை, பரத்தன் - பரத்தை, பரன் - பரை, வலவன் வலவை. பண்டையொருமை யீறாகிய இகரவீறும் பெண்பாலீறாதல் முன்னர்க் கூறப்பட்டது.
எ-டு: செல்வன்-செல்வி, புலவன்-புலத்தி.
கள்ளன்-கள்ளி, கிழவன்-கிழத்தி.
சில ஆண்பால் அன்னீறு பெண்பாலில் இனி என்று திரியும். எ-டு: பாணன்-பாணினி-பாடினி.
சில ஆண்பால் அனன் ஈறு பெண்பாலில் அனி என்று திரியும். எ-டு: பார்ப்பனன்-பார்ப்பனி.
அன்னையைக் குறிக்கும் அம்மை, அச்சி என்னும் பெயர்கள் அருமைபற்றிப் பெண்பாலீறாம்.
எ-டு: கண்ணம்மை, தங்கைச்சி.
அத்தி அச்சி என்னும் அன்னை பெயர்கள், குலமும் தொழிலும் பற்றிய பொண்பாலீறாய் வழங்கும்.
எ-டு: மறத்தி, மருத்துவச்சி.
அத்தி, அச்சி என்பன இத்தி, இச்சி என்றுந் திரியும்.
எ-டு: வேட்டுவித்தி, கட்டுவிச்சி.
சில பெண்பாற் பெயர்கள்,
ஆண்பாற்குரிய மறமும்
ஆண்மையு முணர்த்த ஆண்பாலீறு கொள்ளும்.
எ-டு: அம்மை-அம்மன், பேடு-பேடன்.
அம்மை என்னுஞ் சொல்லை யொத்து, அக்கை என்னும்
சொல்லும் அக்கன் என்று திரியும்.