உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலி லாய்ந்த வொண் டீந்தமிழ்

என்று மாணிக்கவாசகர் பாடியது இக் கருத்துப்பற்றியே. அகத்திய மும் தொல்காப்பியமும் கடைக்கழக இலக்கண நூல்களாயிருந்தன. இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் ஈராயிரத்தைந் நூறாண்டிற்குமேல் இடையீடுபட்டுவிட்டதனால், இடைக்கழகத் திறுதிப் பாண்டியனான முடத்திருமாறனே கடைக்கழக முதற் பாண்டியனானான் என்பது பொருந்தாது. இந் நெட்டிடை யீட்டிற்குக் கரணியம் பின்னர்க் கூறப்படும். கழக இருக்கையை றையனா ரகப்பொருளுரை உத்தர மதுரை யென்று கூறியது தென்மதுரையொடு ஒப்புநோக்கியென் றறிக.

கழகத்திற்குத் தொகை யென்றும், கூடல் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. அதன்பின், இடவாகு பெயராக மதுரையும் கூடலெனப் பட்டு, மாடச் சிறப்பால் மாடக்கூடல், நான்மாடக்கூடல் என்னும் வழக்கெழுந்தது. மாடங்கள் முகில்படியுமாறு வானளாவ வுயர்ந் திருந்ததனால், நான்முகின் மாடக்கூடல் என்று புலவர் புகழ்ந்து பாடினர். அத் தொடரைத் தொல்கதையாளர் பயன்படுத்திக் கொண்டு, மதுரைமேற் கடுமழை பொழிந்த நான்முகில்களை நான்மாடங்கள் கூடித் தடுத்தன வென்று கதை புனைந்துவிட்டனர்.

மதுரைக் கோட்டை வாயில் ஒன்றன் முன், ஒரு மூதால மரம் படர்ந்தோங்கி யிருந்ததனால், அவ்விடம் ஆலவாய் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம். அப் பெயரையும் பொருள் திரித்து, பாம்பினால் எல்லை காட்டப்பட்ட விடமென்று கதை கட்டி விட்டனர். ஆலவாய் என்பது முதலில் நான்மாடங்களுள் ஒன்றன் பெயராகவே யிருந்தது. நான்மாடப் பெயர்களை, அவை திருவாலவாய் திருநள்ளாறு திருமுடங்கை திருநடுவூர். இனிக் கன்னங் கரியமால் காளி ஆலவாய் என்றுமாம்' என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. (கலித்.92,உரை).

சமற்கிருத ஆக்கம்

66

வேத ஆரியர் என்று சொல்லப்படும் இந்திய ஆரியர் இந்தியாவிற்குட்புகுந்தவுடன் தம் (கிரேக்கத்தையொத்த) மொழியை மறந்துவிட்டனர். இதற்கு அவர் சிறுதொகையினரா யிருந்ததும் பழங்குடி மக்களுடன் கலந்து போனதுமே கரணியம்.

ஆரியப் பூசாரியரும் அவரைப் பின்பற்றிய விசுவாமித்திரன் போன்ற ஒருசில நாட்டுமக்களும், பாடிய மந்திரத் தொகுதி என்னும் பாடற்றிரட்டே இருக்கு வேதமாம். அதன் மொழி, மறந்துபோன கீழை யாரியமும் வடநாட்டுத் திரவிடமாகிய பிராகிருதமுங் கலந்த