79
(3) பிரமாண்ட தானம்
(4) கல்ப பாதப தானம் (5) கோசகசிரம்
(6) இரணிய காமதேனு தானம்- (7) இரணியாசுவ தானம் (8) இரணியாசுவரத தானம் (9) ஏமாத்தித தானம்
(10) பஞ்சலாங்குல பூதானம் (11) தரா தானம்
(12) விசுவ சக்கர தானம்
(13) மகா கல்ப லதா தானம்
(14) சப்த சாகர தானம்
(15) இரத்தினதேனு தானம்
(16) மகா பூத கடதானம்
-
-
-
-
பொன் நிலவுருண்டைக்
கொடை.
.
விண்மரப் பொற்கொடை ஆயிர ஆக் கொடை. பொன்னாக் கொடை. பொற்குதிரைக் கொடை.
பொற்குதிரைத் தேர்க்கொடை. பொன்யானைத் தேர்க் கொடை.
ஐயேர் நிலக்கொடை. பொன்நிலக் கொடை வியனுல காழிப்
பொற்கொடை
பெருவிண்கொடிப்
பொற்கொடை.
எழுகடற் கொடை.
மணிப்பொன் னாக்கொடை. ஐம்பூதப் பொற்கலக் கொடை.
இவற்றுள் விண்மரப் பொற்கொடை ஒரு குதிரை வேள்விக்குச் சமம் என்றும், பொற்குதிரைத் தேர்க்கொடையால் தீவினை யனைத்தும் நீங்குமென்றும் சொல்லப்பட்டது.
பொற்கருப்பைக் கொடை என்பது, பொன்னால் ஆவுருச் செய்து அதனூடு புகுந்து வெளிவந்தபின் அதனைப் பிராமணனுக்குக் கொடுப்பது. பொன்னாப் புகல் மறுபிறப்பிற்கு ஒப்பான தென்றும், அதனால் தீவினை நீங்கி வாழ்நாள் நீடிக்கும் என்றும் கருத்து. ஓர் ஆள் புகுந்து வெளிவருமளவு ஆவுருவம் செய்வதற்கு, எத்துணைப் பான் வேண்டுமென்றும், அதைப் பெறுபவனுக்கு அது எத்துணைப் பெருஞ்செல்வமென்றும் எண்ணிக் காண்க.
பொன்னிலக்கொடையென்பது நாவலந்தீவம்போல் அமைத்த திண்ணிய பொற்கட்டைக் கொடுப்பது.
எழுகடற்கொடை என்பது நன்னீர், உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு ஆகியவற்றை எழு குண்டங்களில் நிரப்பிச் சடங்குசெய்து கொடுப்பது.
பிராமணருக்குக் கொடுக்கும் நிலத்திற்குப் பிரமதாயம் என்றும், ஊர்க்குப் பிரமதேயம் என்றும் பெயர்.