தகடூர் யாத்திரை மூலமும் உரையும்
22. தருக்க வாதம்
வஞ்சி இடையிட்ட நேரிசை ஆசிரியப்பா
47. கனவே போலவும் நனவே போலவும்
முன்னிய தன்றியென் உள்ளகம் நடுங்குறக் கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும் இருவகை உயர்திணைக் கேந்திய கொடியொடும் வெருவந்த தோற்றத்தால் உருவின பலகூளிக் கணங்கள் குருதி மண்டைசுமந் தாடவும் பறையன்ன விழித்தகண்ணாள்
பிறையன்ன பேரெயிற்றாள்
- குடையன்ன பெருமுலையாள்
இடைகரந்த பெருமோட்டாள்
இடியன்ன பெருங்குரலாள்
தடிவாயிற் றசைப்புறத்தாள்
185
கடலன்ன பெருமேனியாள் காண்பின்னாக் கமழ்கோதையாள்
சிலையன்ன புருவத்தாள்
சென்றேந்திய அகலல்குலாள்
மழையுமஞ்சும் வளியும்போலும்
செலவினாளொரு பெண்டாட்டி
தலைவிரித்துத் தடக்கைநாற்றி
மறனெறிந்து மாறுகொண்டறியா
அறிவுக்கிம் முறை *நாள் இவ்வளவென்றே பூவிரல்காட்டி நீறுபொங் கத்தன்
கைகளால் நிலனடித் தூரையிடஞ் செய்து காடு †புகுதல் கண்டேன் என்னும் கவலை நெஞ்சமொ டவலம் நீந்தினாள்
அன்றது மன்றவ் வதிகமான் +தாய்க்கே.
ள்) கனவே போலும் என்னுமாறும், இல்லை நனவே
போலும் என்னுமாறும் தோன்றிய தல்லாமல், எனது உள்ளம்
- (பா-ம்) குவடன்ன ; கூடன்ன.
(பா-ம்) நான் இவ்வளவன்றே. * புகுதகக். + தாய்க்கு.