பண்டைத் தமிழகம்
47
மருதநிலத் தெய்வத்துக்குப் பண்டிருந்த பெருமையை, அகத்தியர் வேந்தன் சிவிகையைச் சுமந்ததாகத் திருவிளையாடற் புராணமும் குமரிமலையை மகேந்திரமென்று வடநூல்களும் ஐந்திரத்தை 'விண்ணவர் கோமான் விழுநூல்' என்று சிலப்பதி காரமும் கூறுவதும், வேந்தன் விழாவை ஒரு சோழன் நிறுத்தியதால் புகார் கடல்வாய்ப்பட்டதென்ற கொள்கையும் விளக்கும்.
வேந்தனுக்குச் சேணோன் புரந்தரன் என்றும் பெயருண்டு. சேண் உயரம். சேணுலகத்தரசன் சேணோன். வானுலகைப் புரந்தருபவன் புரந்தரன். புரந்தருதல் காத்தல்.
நெய்தல்நிலத் தெய்வம் வாரணன்
வாரணம் = கடல். வாரணன் - கடலோன்.
கடல்மீனாகிய சுறாவின் கோடு (முதுகெலும்பு) வாரண னுக்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது.
கடைக்கழகத்திற்குப் பின்புகூடத் தமிழர் வாரித்துறையில், தேர்ந்திருந்தமையும், தமிழரசர் நாவாய்ப்படை வைத்திருந்தமையும், "காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி...
முரட்டொழிற் சிங்களர் ஈழமண் டலமும்... முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம்
10
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
"
என்று முதலாம் இராஜராஜசோழன் (985) மெய்க்கீர்த்தியும்,
"அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்க வர்ம்ம னாகிய கடாரத் தரசனை வாகையம் பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்து.... தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
12
11
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி"
என்று இராஜேந்திர சோழன் (1012) மெய்க்கீர்த்தியும் கூறுவ தாலும், 13ஆம் நூற்றாண்டுவரை பாண்டியரும் சோழரும் ஈழத் தொடு வைத்திருந்த போர்நட்புத் தொடர்பினாலும் அறியப்படும்.
9 காந்தளூர் - மேல்கரையில் ஓர் ஊர்
11
நக்கவாரம்
-
Nicobar
10
ஈழம் - இலங்கை
12
கடாரம் - பர்மா