142
(3) எதிர்கால வினைமுற்று
(4) நிகழ்கால வினையெச்சம்
(5) தொழிற்பெயர்
ஒப்பியன் மொழிநூல்
கா : செய்வீர்.
கா : செய்ய.
கா : செயல்.
(6) துணைவினை பெற்றது
கா: செய்யட்டும் (செய்யவிடும்).
செயல்வினைப் பன்மையீறுகள் ஈர் இர் ஆகும்.நீர்-ஈர்-இர்.
கா : செய்நீர், செய்தனிர்; செய்கின்றீர், செய்கிறீர்; செய்வீர், செய்விர்.
கள்' ஈறு முன்னிலை படர்க்கைப் பன்மையில் ஈற்றுமே லீறாய் வரும். ஒருமையீறு, பன்மையீறு, பன்மையீற்று மேலீறு என்னும் மூன்றும் முறையே, இழிந்தோன் ஒப்போன் உயர்ந்தோன் என்னும் மூவர்க்கும் உலக வழக்கிற் கொள்ளப் பட்டன. இவ் வியல்பு மலேய மொழிகளிலும் உள்ளது.
=
படர்க்கைவினை முற்கூறப்பட்டது.
வியங்கோள் வினை
வியம் = ஏவல். வியங்கொள் - வியங்கோள் (முன்னிலை திரிந்த தொழிற்பெயர்). உயரச்சுட்டு செல்லுதற் பொருளில் வரும் என்று முன்னமே கூறப்பட்டது. ஒய் = செலுத்து. ஒய் + அம் = ஒயம். ஒய்-உய் + அம் உயம். உய் = செலுத்து. ஒ.நோ: ஓ செலுத்து.ஒ.நோ:ஓ ஓடு.ஏ ஏவு = ஏகு. ஏவு பிறவினைப் பொருளிலும் ஏகு தன்வினைப் பொருளிலும் வழங்குகின்றன. ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் அவ் இருபொருளும் உள. உயம்-வியம். ஏவல்குறித்த வியம் என்னும் சொல், மதிப்பான ஏவலுக்குப் பெயராபிற்று. "தேர்வியங்கொண்ட பத்து என்னுஞ் சொற்றொடரில், வியங்கொள் என்னுஞ் சொல் செலுத்தற்பொருளில் வந்திருத்தல் காண்க.
66
ஏவலும் வியங்கோளும் சொன்முறையில் ஒன்றே. தொழிற் பெயரே ஏவலாகவும் வியங்கோளாகவும் பயன்படுத்தப்பட்டது. "செயல்" "எனல்'" என்று திருவள்ளுவரும் "நிலையில்" "கொளலே 7710 என்று தொல்காப்பியரும் கூறுதல் காண்க. நில் (தொழிற்பெயர்) + ஈயல் நிலீயல் நின்றருள். ஈயல் ஈதல். நிலீயல்
=
8 ஐங்குறுநூறு, ப. 139
9 குறள். 39, 196
10 தொல்.15,405
=