146
ஒப்பியன் மொழிநூல்
உள் + அது = உள்ளது. உள் +து = உண்டு. இல் + அது = இல்லது. இல் + து = இன்று. உள் + அ = உள்ள உள. இல்+அ = இல்ல ல - இலை. இல்ல - இல்லை. ஒ.நோ: அம்ம - அம்மை.
செந்தமிழில் ஐகாரவீறாயுள்ள பல சொற்கள், உலக வழக்கிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் அகரவீறாகவே வழங்குகின்றன. முன்னது இயல்பான வடிவும் பின்னது பண்படுத்திய வடிவுமாகும்.
பெயரெச்சம்
பெயரெச்சம் பின்வருமாறு பலவகைகளில் உண்டாகும்.
(1) வினைப்பகுதி. கா : பெரு, சிறு.
(2)
பலவின்பால் வினைமுற்று. கா : நல்ல, சின்ன, பெரிய, பெயரிய.
இய என்னும் ஈற்றில், இகரம் இறந்தகால வினையெச்சவீறும் அகரம் பலவின்பால் வினைமுற் றீறுமாகும்.
கா : இ. கா. வி. எ. ப.பா.வி.மு.
ஓடி
ஓடிய
பெயரெச்சம்
ஓடிய
இறந்தகால வினையெச்சமே முதலாவது முற்றாயிருந்த தென்றும், பின்பு பாலீறு சேர்க்கப்பட்டுத் தற்கால முற்றான தென்றும் முன்னமே கூறப்பட்டதை நினைக்க.
கா : செய்து + அ = செய்த (வி.மு.) - செய்த (பெ.எ.).
—
-
ஓடிய ஓடின, போகிய - போகின - போயின, போகி-போய் + அ = போய் போன, உறங்கிய - உறங்கின, ஆய - ஆன. ய-ன, போலி.ஒ.நோ: யான் - நான், யமன் (வ.) - நமன்.
செய்தன (செய்தன் + அ) என்னும் வடிவம், ஆண்பால் வினைமுற்றின்மேல் சேர்ந்த அடுக்கீற்று
வினையாகும்.
பலவின்பாலீறு
ஆகவே, உண்மையில் இடைநிலையென்றும் சாரியை யென்றும் பகுபதத்தில் ஒருறுப்புமில்லையென்க.
(3) ஈறுகெட்டபெயர். கா : வட்ட, மர.