உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

145

அன்று போனான் = அல்லாது போனான். இன்று போனான் = இல்லாது போனான்.

இதையறியாது,

“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்

தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே

""

(நன். 173)

என்றார் பவணந்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறுகெட்டும்

வரும்.

பெயரெச்சம்

=

செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) செய்யாத (படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று).

படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்சமாகு மென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்க.

செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும்.

தொழிற்பெயர்

செய்யாத (பெயரெச்சம்) + மை (தொழிற்பெயரீறு) செய்யாதமை.

செய்யா (ஈறுகெட்டது) + மை = செய்யாமை.

செய்யாத + அது = செய்யாதது.

வினையாலணையும் பெயர்

முற்று

செய்யாத + அவன் = செய்யாதவன் - செய்யாதான்.

குறிப்புவினை

குறிப்பு வினைமுற்று மூவகையது :

(1) பாலீறில்லாத பெயர். கா : அது மரம்; அவன் யார்? (2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது, நல்ல. (3) குறைவினை (Defective Verb). கா : உண்டு, இல்லை.

=

உண்டு இல்லை என்பனவும் பாலீறு பெற்றவையே; இப்போது பாற்பொருளிழந்து வழங்குகின்றன.