தமிழ்மொழித் தோற்றம்
145
அன்று போனான் = அல்லாது போனான். இன்று போனான் = இல்லாது போனான்.
இதையறியாது,
“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்
தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே
""
(நன். 173)
என்றார் பவணந்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறுகெட்டும்
வரும்.
பெயரெச்சம்
=
செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) செய்யாத (படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று).
படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்சமாகு மென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்க.
செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும்.
தொழிற்பெயர்
செய்யாத (பெயரெச்சம்) + மை (தொழிற்பெயரீறு) செய்யாதமை.
செய்யா (ஈறுகெட்டது) + மை = செய்யாமை.
செய்யாத + அது = செய்யாதது.
வினையாலணையும் பெயர்
முற்று
செய்யாத + அவன் = செய்யாதவன் - செய்யாதான்.
குறிப்புவினை
குறிப்பு வினைமுற்று மூவகையது :
(1) பாலீறில்லாத பெயர். கா : அது மரம்; அவன் யார்? (2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது, நல்ல. (3) குறைவினை (Defective Verb). கா : உண்டு, இல்லை.
=
உண்டு இல்லை என்பனவும் பாலீறு பெற்றவையே; இப்போது பாற்பொருளிழந்து வழங்குகின்றன.