மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன
125
ஆராய்ச்சியாளர்க்கும் நூலியற்று வார்க்கும் வற்புறுத்துகிறார், இக்கருத்து அடிகளார் நூல்கள் அனைத்திலும் கொண்டு போற்றப்பட்டதும், அவர்க்குத் தனிப்பெருமை சேர்த்ததும் ஆகிய கடைப்பிடியாகும்.
"இவ்வாராய்ச்சி யுரையின்கண் மற்றொரு முதன்மையான சீர்திருத்தமும் செய்திருக்கின்றேம். தொன்று தொட்ட சிறப்பும், இலக்கண இலக்கிய வரம்பும், தனக்கெனப் பன்னூறாயிரம் சொற்களும் வாய்ந்து இன்றுகாறும் வழக்குவீழாது உயிரோடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத
கடமையாம்.
சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாதது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார் போற்றம்மை எண்ணிக் கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதும் கைவிட்டிருத்தல்நிரம்பவும் இரங்கற் பால தொன்றாம். னியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவும் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும். இதனை முன் நடந்து காட்டும் பொருட்டு, இதற்கு முன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பப் பதிப்பிட்டு வரும். இப்போது முழுதும் களைந்து விட்டு, அவை நின்ற இடத்திற் தூய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றோம்" என்கிறார்.
இக்கொள்கை, அடிகளின் அரிய பெரிய ஆராய்ச்சித் திறனால் கண்டு ஓரியக்கப்படுத்தி வளர்க்கவும் தமிழ் வளமாக்கவும் 'தமிழ் உயர் தனிச் செம்மொழி' என்பதை உலகுக்கு நிலைப்படுத்திக் காட்டவும் ஏந்தாக அமைந்த தாகலின் ஆய்வியல் நெறிமுறைகளுள் ஒன்றாகக் கொள்ளத்தக்கது ஆயிற்றாம்.